அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யாதீங்க!

kamal-politics-starts-from-abdul-kalam-house

மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்சி என்றும் பெருமை பேசி முன்னோர்களின் புகழை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் இறுதி ஊர்வல மாதிரியை வைத்தும், அப்பல்லோவில் அவர் சிகிச்சை பெற்று வந்த சர்ச்சைக்குள்ளான வீடியோ ஆதாரங்களை வைத்தும் கேவலமான அரசியல் நாடகம் அரங்கேறியது. இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் அப்துல்கலாம் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

இந்த அரசியல் பயணம்,அப்துல்கலாம் மறைவின்போதும், அப்துல்கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவின் போதும் தொடங்கியது. அவர் மறைந்த சில நாட்களில் அவருடைய பெயரில் கட்சி தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு கலாமின் குடும்ப உறுப்பினர் இடம் கொடுக்கவில்லை. அடுத்ததாக அவர் சிலை அருகே, திருக்குறள் தான் இருக்க வேண்டும், குர்ஆன் தான் இருக்க வேண்டும், பைபிளும் பகவத்கீதை இருந்தால் தப்பில்லை என்றும் ஆளாளுக்கு மோதிக்கொண்டு, புனிதமான இடத்திலும் கேவலமான செயல்களை செய்யத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக பலரும் பலவிதமாக அவருடைய பெயரை பலவிதமான செயல்களுக்கு பயன்படுத்துவது பலர் மனதை புண்படுத்துவது மட்டுமின்றி அப்பழுக்கற்ற கலாமை அவமதிப்பதாகவே அமைகிறது. கலாமின் பெயரில் இயங்கும் ஒருசில இயக்கங்கள் ஆக்கபூர்வமான பணியை செய்தபோதிலும், பல நிறுவனங்கள் வெளியே கலாம் பெயரை வைத்துக்கொண்டு உள்ளே மோசடி வேலை செய்து வருகிறது. இவற்றை அறவே தடுக்க வேண்டும்.

இப்போது இந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்துவிடுவாரோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. கமல் நேர்மையான மனிதர் என்று பலரால் பாராட்டப் பெற்றாலும், அவர் அப்துல்கலாமை பின்பற்றுபவராக இருந்தாலும், அப்துல்கலாமின் மறைவின் போது மனமுருகி நீண்ட கவிதை எழுதியிருந்தாலும், வருகிற பிப்ரவரி 21ம் தேதி கலாம் வாழ்ந்த இராமநாதபுர இல்லத்திலிருந்து என் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்று கூறியிருப்பதை பலர் ஏற்கத்தயாராக இல்லை. எதிர்ப்புகள் தான் குவிந்து வருகிறது. கமலின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், நாளைக்கு வருகிற போகிற தராதரமற்ற மனிதர்கள் எல்லாம் [ கவண் படத்தில் வந்த “புறா”நானூறு  அமைச்சர்கள் போல சில மனிதர்கள் ]  கமலை சுட்டிக்காட்டி, கலாம் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்பதே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Articles

டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் ம... இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்க...
திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திரு... நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனா...
சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் எ... சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.அதை அடுத்த கட்டத்திற்க...
யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசியவிருது ... யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் கேள்விக்கான விடைதான் இன்றும் கிடை...

Be the first to comment on "அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யாதீங்க!"

Leave a comment

Your email address will not be published.


*