பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்!

Avane Srimannarayana movie review
  1. சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள்
  2. தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment 
  3. ராவணன் மற்றும் அனுமன் வேடம் போட்டவர்களை அபிரர்களின் தலைவன் சுட்டுக்கொள்ளும் படத்தின் முதல் காட்சியே அபத்தம். 
  4. ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் சூப்பர். அதே போல காஸ்ட்யூம் டிசைனிங் மற்றும் கலை இயக்கம் இரண்டும் சூப்பர். தமிழ் மொழி உச்சரிப்புகளையும் நன்றாக செய்துள்ளனர். 
  5. அபிரர்களின் தலைவன் ராமராமனை கொன்றுவிட்டு மகன் ஜெயராமன் அரசாங்கத்திற்கு சொந்தமான புதையலை கொள்ளையடித்தவர்களையும் புதையலையும்  எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதே கதை. 
  6. (ராமாயணம் கலந்த புதையலை தேடும் கதை)

  7. ஸ்கிரீனை கிழித்துக்கொண்டு நாயகன் என்ட்ரி ஆக திரையில் “அவனே ஸ்ரீமன் நாராயணா” என்று வசனம் ஒலிக்க போலீஸ் உடையுடன் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு நாயகன் அறிமுகமாகிறார். செம மொக்கையான அறிமுக காட்சி. 
  8. நாயகன் எந்நேரமும் சுருட்டுப் பிடித்துக்கொண்டே இருப்பது, அசால்ட்டாக எல்லாம் செய்து கிழிப்பது எல்லாம் அபத்தம். 
  9. சீன் பை சீன் மாஸ் காட்சியாக உருவாக்க முயன்றிருக்கிறார்கள், ஆனால் அது நிறைவேறவில்லை. காமெடியாக நினைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் கடுப்பை கிளப்புகின்றன. 
  10. ஹாய் அமராவதி என்ற பத்திரிக்கை நடத்தி வருபவராக கதாநாயகி நன்றாக நடித்துள்ளார். படத்தில் உருப்படியான கதாபாத்திரம் என்றால் அது கதாநாயகி பாத்திரம் தான். 
  11. படம் ஆரம்பித்ததில் இருந்தே சலிப்பாக தான் இருந்தது, ஒரு காட்சி கூட சுவாரஸ்யமாக இல்லை. ஜாக்கிசான் ஸ்டைலில் காமெடி கலந்து சண்டை போடுகிறேன் என்று ஹீரோ செய்யும் குரங்குசேட்டை எல்லாம் எரிச்சலை ஏற்படுத்தின. 
  12. பாடல்கள் அனைத்தும் படுமோசம், அதற்கான நடன அமைப்புகள் அதைவிட படுமோசமாக இருந்தது. 
  13. இடைவேளையின் போது வருகிற ஹீரோ ஹீரோயின் குகை காட்சி மற்றும் பாரிஜாத மரத்தைச் சுற்றி மரம்மரம் என்ற குறிப்பை வைத்து புதையலை தேடும் காட்சி மட்டும் ஓரளவுக்கு ஓகே ரகம். 
  14. படத்தின் நீளம் மிக அதிகம். மன சோர்வும் உடல் சோர்வும் ஏற்படுகிறது.
  15. நடிகர் நடிகைகளின் பங்களிப்பு அருமை. இருந்தபோதிலும் படம் சுமாராக இருந்ததற்கு அழுத்தமற்ற கதையும் அலட்சியமான திரைக்கதையுமே காரணம்.  

மனம் கவர்ந்த வசனங்கள்: 

  1. ராவணன், அசுரர்கள்ல உயர்ந்தவன்… மனிதர்கள்ல உண்மையானவன்… 
  2. வழி தவறிப் போனவங்கள மன்னிக்கலாம், ஆனா தப்பான வழில போனவங்கள மன்னிக்க கூடாது… 
  3. என்னோட ஆசைய என்னோட பலவீனமா நினைக்காத நாராயணா…
  4. துரோகிய ஒரே தடவ சுட்டுக் கொள்றது தண்டனை இல்ல அது விடுதலை. கொஞ்சம் கொஞ்சமா சிதைக்கறது தான் உண்மையான தண்டனை… 
  5. குறிவச்ச துப்பாக்கிக்கு அனுமதி தேவை இல்ல… சுட்டுத் தள்ளு… 
  6. தாடி நரைச்சாலும் பாடிய இன்னும் ஃபிட்டா தான் வச்சிருக்க…

Related Articles

தவறான வழியில் பணம் சம்பாதித்தால் நாம் என... கமல்ஹாசன் தன்னுடைய காதலா காதலா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். மிக முக்கியமான வசனம் அது.  நல்ல வேலைக்குப் போயி உருப்பட்ற ஐடியா இல்லையா என்று டெல்லி...
ZEE5 தளத்தில் வெளியான சிகை, களவு திரைப்ப... சிகை:  மதயானைக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற கோன கொ...
” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல... தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்கள். அவருடன் பிரபல திரைவிமர்சகர் மேற்கொண்ட உரையாடல், " மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்...
டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...

Be the first to comment on "பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*