நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ ஒருவன் ஒரு பார்வை!

Evano Oruvan Movie Review

இயக்குனர் நிஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், சங்கீதா மற்றும் சீமான் நடிப்பில் உருவான படம் எவனோ ஒருவன். மராத்தியில் வெளியான டோம்பிவிலி பாஸ்ட் என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற நடுத்தர வர்க்க குடும்பஸ்தர். ஒரு பையன் ஒரு மகள் மனைவி என்று அளவான குடும்பத்துடன் வாழ்ந்து வரும் வாசுதேவன் நேர்மையான மனிதர். ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் என்பதை தீவிரமாகப் பின்பற்றுபவர்.

மகள் வர்சாவை தனியார் பள்ளியில் சேர்க்க முயல்கிறார். டொனேசன் கேட்டதால் அந்தப் பள்ளிக்கூடமே வேண்டாம் என்று அரசுப்பள்ளிக்கூட படிப்பே போதும் என்கிறார். மகனை டியூசன் அனுப்ப சொல்கிறார் மனைவி. பள்ளிக்கூடத்துல படிக்கிற வாத்தியார்கிட்டயே டியூசனா, டியூசன்ல சொல்லித்தரத ஸ்கூல்லயே சொல்லி தரதுதான என்று மனைவியிடம் வாதாடுகிறார். ஏன் யாருமே நேர்மையா இருக்க மாட்டிங்குறாங்க என்று வாசுதெவன் குமுற அந்த சமயத்தில் தண்ணீர் லாரிகாரன் தண்ணீர் விட லஞ்சம் கேட்கிறான். அதை தட்டிக்கேட்கிறார் வாசு. ஆபிசுக்குச் சென்றால் அங்கு மலையாள பணக்காரன் இருக்க வேண்டிய முக்கியமான டாக்குமெண்ட் இல்லாமல் லோன் வாங்க ஒத்துழைக்க சொல்கிறார். அது வாசுவுக்கு பிடிக்கவில்லை. குளிர்பான கடையில் நண்பருடன் குளிர்பானம் அருந்த கடைக்காரரோ இரண்டு ரூபாய் அதிகமாக கேட்கிறார். உடனே கிரிக்கெட் பேட்டை தூக்கி கடையை அடித்து நொறுக்குகிறார். தண்ணீ லாரிக்குச் சொந்தக்காரனான கவுன்சிலரோ தேவையில்லாத நீச்சல் குளத்தை துவக்கி வைக்க அவரை கத்தியால் வெட்டுகிறார் வாசு. கஞ்சா விற்பவனின் இடத்தை தேடிச்சென்று அங்குள்ள குடிசைகளை கொளுத்திவிட்டு அங்கிருந்து துப்பாக்கியோடு திரும்புகிறார்.

போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது. நடுஇரவில் சாலையில் அமர்ந்து ஏன் யாருமே நேர்மையா இருக்க மாட்டிங்குறாங்க என்று புலம்புகிறார். அன்றுகாலை வாய்பேச முடியாத சாலையோர ஓவிய சிறுவனுக்கு ரத்த வாந்தி வருகிறது.

மருத்துவமனையிலோ டாக்டர் இல்லை பெட் இல்லை என்று ரிசப்னிஸ்ட்டும் செவிலியனும் ஒரு தாத்தாவை அதட்ட அங்கு நடந்த அநியாயத்தை டாக்டர் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார். இது பத்திரிக்கைகளில் வெளியாக காவல் துறையினர் அவரை என்கவுன்டர் பண்ண முடிவு செய்கிறது. காவல் ஆய்வாளரான சீமான் அதற்குப் பொறுப்பேற்கிறார்.

வாசுதேவனின் நேர்மையான அறச்சீற்றத்தை சைக்கோ தனம், லூசுத்தனம், அரவேக்காடு என்று ஒருதரப்பு சொல்ல இன்னொரு தரப்போ சூப்பர்மேன் என்று பாராட்டுகிறது. வாசுதேவன் செஞ்ச தப்பு தப்ப தட்டிக் கேட்டதுதான்… நம்ம நாட்டுல குற்றவாளியவிட குற்றத்த தட்டிக் கேட்கறவன தான் கேவலமா பாக்குறோம் என்று புலம்புகிறார் சீமான். அவரே பின்னாளில் வாசுதேவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து துப்பாக்கியோடு செல்கிறார்.

வாசுவோ நான் என் குடும்பத்த மட்டும் பாத்துட்டு வந்துட்றேன் என் மகளுக்கு ஆஸ்துமா இருக்கு ப்ளீஸ் என்று கெஞ்ச காவல் ஆய்வாளரோ மறுக்கிறார்கள். உடனே வாசு தன்னிடம் உள்ள துப்பாக்கியை காட்டி மிரட்ட போலீசோ அவரை சுடுகிறது. வாசுவின் கையிலுள்ள தோட்டா இல்லாத துப்பாக்கி கீழே விழுகிறது!

தலைகுனிஞ்சே நடந்து பழக்கப்பட்ட நம்மள்ல இருந்து ஒருத்தன் தலைநிமிர்ந்தானா உடனே அவன தலைல தட்டி உட்கார வைக்குறோம்… அப்டியும் இல்லன்னா தரையோடு தரையா தலைய வச்சி தேய்ச்சிவிட்றோம் என்று காவல் ஆய்வாளர் சொல்ல படம் முடிகிறது.

ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ் படங்களில் சொல்லப்படும் விஷியங்கள் தான் இங்கு சொல்லப்பட்டிருக்கு என்றாலும் சொன்ன விதத்தில் வித்யாசமாக நின்று மனதை கவர்கிறது. நேர்மையாக இருப்பது ஒரு வகை நோயாகவே மாற்றிவிட்டது இந்த சமூகம் என்பதை உணர்த்தும் அட்டகாசமான படம்.

Related Articles

பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோ... பெண் பிள்ளைகளின் பெற்றோர் செய்யக் கூடியவை, செய்ய வேண்டாதவைதாய் தந்தையை தவிர வேறு யாரும் குழந்தையை தீண்ட அனுமதிக்க கூடாது. குழந்தைகள் தனியாக இ...
தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!... எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்... கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்... மத்தவங்கள மாதிரி சுயநலமா என்...
அதிமுகவின் கைக்கூலியா கரூர் கலெக்டர்? கொ... ஆட்சியர் கோவிந்தராஜூக்கு பணிமாற்றம் வந்ததும் கரூரின் அடுத்த கலெக்டராக நியமிக்கப்பட்டார் ஆட்சியர் அன்பழகன். தற்போது அவருக்கு கொலைமிரட்டல் வந்துள்ள செய்...
பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெ... கோடை காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு வருடம் வருடம் வரக்கூடிய ஒரு பிரச்சினை எதாவதொரு நோய்த் தொற்று. கடந்த வருடம் டெங்கு வந்து ஒரு காட்டு காட்டியது. அரச...

Be the first to comment on "நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ ஒருவன் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*