தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம் செய்வதன் மூலம் காப்பாற்றலாம்!

Fire Burn Victims can be saved by skin donation

சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு
முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே பெட்ரோல்
ஊத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது. அது போன்ற சமயங்களில் தீக்காயம்
அடைந்தவரை காப்பாற்ற தோல் தானம் உதவுகிறது.

தோல் தானம்

கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு மருத்துவமனைகளிலயே முதன்முறையாக ரூபாய் 70 லட்சம்
செலவில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் அழகியல் துறையில் தோல் வங்கி
துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த
ஜனவரி 24ம் தேதி தோல் வங்கி துவங்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தவர்கள், தற்கொலை விபத்து இல்லாமல் இயற்கையாக மரணமடைபவர்கள் தோல் தானம் செய்யலாம். உயிரழந்த ஆறு மணி நேரத்திற்குள் தானமாக வழங்கப்பட வேண்டும்.

இப்படி தானமாக பெற்ற தோலை மூன்று வாரங்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்டு தோலில்
எந்தவொரு நோய்த்தொற்றும் இல்லை என்று உறுதி செய்த பிறகு அந்த தோல் தீக்காயம்
அடைந்தவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமில்லாது அமிலம், மின்சாரம், ரசாயன
அலர்ஜி, மருந்து ஒவ்வாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்படுபவர்களும் இதன் மூலம் பயன்
பெறலாம்.

Related Articles

பில்லா2 இயக்குனரின் அடுத்த படம் எப்படி இ... கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படம். இவருடைய முந்தைய இரண்டு தமிழ் படங்களும் ஆங்கில படங்களுக்கான ...
உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீ... எல்லோர் வீட்டிலும் சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை என்று பல அறைகள் இருக்கும். ஆனால் எத்தனை பேர் வீடுகளில் படிக்கும் அறை இருக்கிறது? படிக்கும் அ...
இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்து... யுனிசெப் அமைப்பு குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.குழந்தை திருமணம் குறித்த யுன...
தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைக... விஜய் தொலைக்காட்சிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காரணம் நீயா நானாவில் சமீப காலமாக மிக முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வ...

Be the first to comment on "தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம் செய்வதன் மூலம் காப்பாற்றலாம்!"

Leave a comment

Your email address will not be published.


*