இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் ஊடாக இந்த மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகளின் மூலம் பயணிகள் காடுகளை உயரத்தில் இருந்து பருந்து பார்வை பார்க்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். இந்தியாவில் முதல் முறையாக கெனொபி நடைமேற்கொள்ளும் வசதி கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்தச் சுற்றுலா வசதி செய்யப்பட்டு இருக்கிறது. கேஸ்டில் ராக் அருகேயுள்ள  உத்தர கன்னடாவின் குவேஷி பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த கெனொபி நடைமேடை. தரை தளத்திலிருந்து முப்பது அடி உயரமும், 240 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்திருக்கிறது இந்த மேடை.

கர்நாடக சுற்றுலா துறையும், கர்நாடக வன துறையும் இணைந்து இந்த திட்டப்பணியை உருவாக்கி இருக்கிறார்கள். பிப்ரவரி 18 ஆம் தேதி முதல்  பொது மக்களின் பயன்பாட்டுக்காக கெனொபி நடை மேடை திறக்கப்பட இருக்கிறது. இதன் திறப்பு விழா அன்று வனத்துறை அமைச்சர் ராமநாத ராய், தொழில் துறை அமைச்சர் ஆர். வி. தேஷ்பாண்டே சுற்றுலாத் துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆகியோர் வருகை தர இருக்கிறார்கள்.

‘இந்த கெனோபி நடை நாட்டிலேயே முதல் முறை இங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று காடுகளின் தலைமை பாதுகாப்பாளர் ஓ. பாலையா தெரிவித்தார். பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாயும், பதிமூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருபத்து ஐந்து ரூபாயும் கட்டணம் வசூலிக்க வனத்துறை முடிவு செய்திருப்பதாகவும், எனினும் ஆப்ரேட்டர்களை பொறுத்து கட்டண வேறுபாடு இருக்குமென்றும்  மேலும் அவர் தெரிவித்தார்.

தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் இந்த கெனோபி நடை உண்டு என்றாலும், நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சுற்றுலா வசதி பறவையியல் ஆய்வாளர்களுக்கும், பறவை விரும்பிகளுக்கும் ஒரு பேரனுபவமாக இருக்கக்கூடும்.

Related Articles

வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நா... 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய...
2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற... ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய...
நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்க...
உங்களுக்கு குறும்படங்கள் பார்ப்பதில் ஆர்... கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சில குறும்படங்கள் பற்றிய மீம்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் குறும்படங்கள் எங்கே உள்ளது என்று தேடிய போது அவை ...

Be the first to comment on "இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்"

Leave a comment

Your email address will not be published.


*