கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் – ஐஐடி ஆய்வு மாணவி சாதனை

கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் - ஐஐடி ஆய்வு மாணவி சாதனை

ஐஐடி கரக்பூரில் உயிர் தொழில்நுட்ப துறையில்(Biotechnology) முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் மாணவி ரம்யா வீறுபோட்லா. இவர் கழிவு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களின் மூலம் இயங்கும் பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இந்த தயாரிப்பு, கழிவு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை செலுத்துவதன் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய தொடங்குகிறது.

‘பொதுவாக நுண்ணுயிர் எரிபொருள் செல்கள் (Microbial Fuel Cells(MFC)) சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள இரண்டு நாட்களாவது ஆகும். அதன் பிறகே அவை மின் உற்பத்தியைத் தொடங்கும். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியில் பாக்டீரியாக்கள் செலுத்தப்பட்டு பத்து நொடிகளுக்குள் மின் உற்பத்தி தொடங்கும். அதாவது பாக்டீரியாக்கள் செலுத்தப்பட்ட உடனேயே’ என்கிறார் பேட்டரியை உருவாக்கிய ஆய்வு மாணவி  ரம்யா.

தற்போது இந்தக் கருவி சில மைக்ரோவாட்ஸ்(Microwatts) அளவுக்கு மின் உற்பத்தி செய்து வருகிறது. தொடர்ந்து இது போன்று சில கருவிகளை உருவாக்கும் பட்சத்தில் அவை நிறைய மின் உற்பத்தியைத் தரும். அதைக் கொண்டு நடைமுறை பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற பேட்டரிகள் போல கனமாக இல்லாமல், ரம்யா உருவாக்கி இருக்கும் இந்த பேட்டரி பேப்பர் தளத்தால்(Paper Platform) எடை குறைவான ஒன்றாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது காற்று எதிர்மின்வாயை(Air Cathode) மற்றும் நேர்மின்வாயை (Anode) போன்றவற்றால் செய்யப்பட்டு இருக்கிறது.

பத்து லட்சம் பரிசு

சமீபத்தில் தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கண்டுபிடிப்பு போட்டி (the annual National Design and Development Innovation Contest) ஐஐடி கரக்பூரில் நடைபெற்றது. டீம் எலெக்ட்ரோட்ஸ் (Team Electrodes) சார்பாகத் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்த ஆய்வு மாணவி ரம்யாவுக்கு முதல் பரிசும், பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

முதல் பரிசை வென்ற ரம்யா தனது உருவாக்கம் குறித்து பேசும் போது ‘ தற்போதைக்கு இந்தக் கருவியை கொண்டு வீட்டுச் சாதனங்களுக்கான மின் வழங்கலை ஏற்படுத்தித் தர இயலாது. இருப்பினும் மின்னணு பாகங்களுக்கான மின் வழங்கலை இந்தக் கருவி மூலம் செய்து தர முடியும்’ என்றார்.

ரம்யாவின் முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர் முனைவர் தேபப்ரதா தாஸ் ‘இந்தக் கண்டுபிடிப்பை உயிர்வாயு கழிப்பறைகளில் (Bio-electric toilets) பயன்படுத்தும் போது மிகப்பெரிய பலனை தரும்’ என்றார். மேலும் இந்தக் கருவி குறித்து அவர் பேசும் போது ‘இது நூறு சதவீதம் மக்கும் தன்மை கொண்டது, சுற்றுச்சூழலுக்கு இணக்கமானது. இந்தத் தன்மைகளை இரசாயன பேட்டரிகளில் நாம் எதிர்பார்க்க முடியாது’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கருவியை உருவாக்க இயந்திர பொறியியல்(Mechanical Engineering) , பொருள் அறிவியல் மற்றும் மின்னணு (Material Science and Electronics) மற்றும் மின் தொடர்பு பொறியியல் (Electrical Communication Engineering)’ ஆகிய துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது கூட்டு முயற்சியை நல்கியிருக்கிறார்கள்

Related Articles

ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ... ஜமால் மாலிக் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒரு நிஜ மனிதரை அல்ல. ஏ. ஆர். ரகுமான் எந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாரோ அந்தப் படத்தின் கத...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...
பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் ப... கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது...
ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் ... ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொ...

Be the first to comment on "கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் – ஐஐடி ஆய்வு மாணவி சாதனை"

Leave a comment

Your email address will not be published.


*