தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை செய்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கீத் ஆர்தர்ட்டன். இந்தச் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப்  யாதவ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முறியடித்தனர்.

இந்தத் தொடரில் தனது பதிமூன்றாவது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் முதன்முதலில் ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். அதன்பிறகு நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் சாஹலுக்கு அடுத்து ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். இந்தத் தொடரில் மட்டும் குல்தீப் யாதவ மொத்தம் பதினாறு விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆர்தர்ட்டனின் இந்தச் சாதனை 1998 – 99 சீசனில் நிகழ்த்தப்பட்டது.

நேற்றைய சாதனைக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் ஆர்தர்ட்டனுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இருந்தார். தென்னாப்பிரிக்காவில் 1993 – 94 சீசனில் நடந்த எட்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பதினோரு விக்கெட்டுகள் வீழ்த்திருந்ததே அவரது சாதனையாக இருந்தது.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானவை. இருப்பினும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கே சாதனைகள் நிகழ்த்துவது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!... அப்பா விஸ்வநாத். இராணுவ வீரர். 24 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவி...
உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!... நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ...
மோடி ஆட்சிக்குப் பிறகு சுவிஸ் பேங்கில் இ... இந்தச் செய்தி பார்க்கும் போது போலியாக நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மை செய்தி தான். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் பல தரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும...
“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் ... ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை. காடுகள் தினம் ...

Be the first to comment on "தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை"

Leave a comment

Your email address will not be published.


*