அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு

H1B

H1B விசா காலம் முடிந்து, அமெரிக்காவில் நிரந்தரமாகத் குடியேறுவதற்கான  க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற இருப்பதாகக் கடந்த வாரம் தகவல்கள் பரவின. டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அந்தத் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளதால் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வெளியேற்றம் இல்லை

க்ரீன் கார்டுக்காக காத்திருப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் H1B  விசா காலம் முடிந்த பின்னும், க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்த அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அமெரிக்கா இழக்க நேரிடும்

கடந்த வாரம் பரப்பப்பட்ட தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் அந்நாட்டு அரசாங்கம் எடுத்த மிக மோசமான ஒரு முடிவாகவும், கொள்கையாகவும் இருந்திருக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்க நாட்டுக்காக உழைத்தவர்களையும், மிக அதிக திறன் பெற்றவர்களையும், நாட்டை விட்டு வெளியேற்றுவது அமெரிக்காவுக்குப் பேரிழப்பாக இருந்திருக்கக்கூடும்என்று அந்நாட்டின் வணிக சேம்பரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இந்தக் கொள்கை செயல் வடிவம் பெற்றிருக்கும் பட்சத்தில், அது அமெரிக்காவின் பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கும் என்றும், மற்ற நாடுகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்தார்.

இது இறுதி முடிவல்ல

டொனால்டு ட்ரம்ப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள், விசா நடைமுறைகளில் அவர் வருங்காலங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரத் தயங்க மாட்டார் என்கின்றனர். கடந்த ஜனவரி 2017 ஆம் ஆண்டு அவர் பதவி ஏற்றதிலிருந்து விசா நடைமுறைகளைக் கடுமையாக்கினார். அவரது அமெரிக்க வேலைவாய்ப்பு அமெரிக்கருக்கேஎன்ற பிரகடனம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் நிலை, மதில்மேல் பூனையாக இருந்து வருகிறது.

Related Articles

டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில ... சர்கார் டிக்கெட் விலை குறித்து கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் நடிகர் விஜய்யின் பெண் ரசிகைகள் மற்றும் குடும்ப பெண்மணிகள்.தீபாவளி நாளை முன்னிட்டு ...
தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!... கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்! தன்னை தேடி வர...
கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களு... ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்கு...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...

Be the first to comment on "அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு"

Leave a comment

Your email address will not be published.


*