தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்

MP villagers deprived of water for 3 years, walk 5 km to get it

மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது.

3000 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் பெரும்பாலனோர் பண்ணை தொழிலாளர்களாகவும், சிறு வணிகர்களாகவும் இருக்கிறார்கள். தினமும் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு நடந்து சென்று அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் எடுத்து வரும் அவலச் சூழல் அந்தக் கிராமத்தில் நிலவி வருகிறது.

அந்தக் கிராமத்திற்குத் தண்ணீர் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

‘உத்திர பிரதேசத்து எல்லை வரை சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. எங்கள் குழந்தைகள் இதனால் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதே இல்லை.தினமும் அவர்கள் எங்களுடனேயே தண்ணீர் எடுக்க வந்து விடுகிறார்கள். காடுகளுக்கு இடையே நடந்து சென்று பெண்கள் தினமும் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.’ என்று கிராம வாசிகள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

‘மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிராகரித்து வருகிறார்கள்’ என்று கிராம வாசிகள் மேலும் தெரிவித்தனர்.

தண்ணீர் பிரச்சனை மட்டுமல்லாமல் சாலை, மின்சாரம் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் கூடக் கிராம வாசிகள் அவதியுறும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்.

Related Articles

மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச ... மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கா...
தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! R... சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படம் என்று எதுவும் இல்லை. வசூல் மன்னன் ரஜினியின் காலா படமே பலத்த அடி வாங்கியது. மாறாக இருட்டு அறையில் மு...
2019 சென்னை புத்தக திருவிழாவில் களமிறங்க... 2019 சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழின் முக்கியமான பதிப்ப...
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் ... கடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் ...

Be the first to comment on "தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்"

Leave a comment

Your email address will not be published.


*