தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்

MP villagers deprived of water for 3 years, walk 5 km to get it

மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது.

3000 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் பெரும்பாலனோர் பண்ணை தொழிலாளர்களாகவும், சிறு வணிகர்களாகவும் இருக்கிறார்கள். தினமும் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு நடந்து சென்று அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் எடுத்து வரும் அவலச் சூழல் அந்தக் கிராமத்தில் நிலவி வருகிறது.

அந்தக் கிராமத்திற்குத் தண்ணீர் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

‘உத்திர பிரதேசத்து எல்லை வரை சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. எங்கள் குழந்தைகள் இதனால் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதே இல்லை.தினமும் அவர்கள் எங்களுடனேயே தண்ணீர் எடுக்க வந்து விடுகிறார்கள். காடுகளுக்கு இடையே நடந்து சென்று பெண்கள் தினமும் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.’ என்று கிராம வாசிகள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

‘மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிராகரித்து வருகிறார்கள்’ என்று கிராம வாசிகள் மேலும் தெரிவித்தனர்.

தண்ணீர் பிரச்சனை மட்டுமல்லாமல் சாலை, மின்சாரம் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் கூடக் கிராம வாசிகள் அவதியுறும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்.

Related Articles

இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – ... 2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக...
ஓட்டு போடாதவர்களும் நோட்டாவுக்கு ஓட்டு ப... கவுண்டமணி தான் ஹீரோவாக நடித்த 490 படத்தில், நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்கள், ஓட்டே போடாமல் இருப்பவர்கள், இந்திய தேசம் சாமானிய மக்கள் வாழ்வதற்கான தேசம் ...
இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிரு... 2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெர...
ரேசன் அரிசின்னா அவ்வளவு கேவலமா போயிடுச்ச... பசி காரணமாக பள்ளிக்கூடம் பக்கம் ஏழை மாணவர்கள் செல்லாமல் சிறுவயதிலயே வேலை வறுமை என்று அலைகிறார்கள், தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற நோக...

Be the first to comment on "தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்"

Leave a comment

Your email address will not be published.


*