மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

Pakistan gets it's first transgender school

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது. எக்ஸ்ப்ளோரிங் பியூச்சர் பவுண்டேசன்(Exploring Future Foundation) என்ற தன்னார்வ அமைப்பின் முதல் திட்டப்பணியாக இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டிருக்கிறது.

திறன் வளர்க்கும் கல்வி

‘திருநங்கைகளின் திறன் வளர்க்கும் வகையிலான பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்’ என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோசியா தாரிக் தெரிவித்து இருக்கிறார். ஆடை தொழில், ஃபேஷன் வடிவமைப்பு, எம்பிராய்டரி , தையல் , கிராபிக் டிசைனிங் மற்றும் சமையல் திறன் போன்ற படிப்புகளில் திருநங்கைகள் மிக அதிக ஆர்வத்தைக் காட்டினார். அவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பாடத் திட்டத்தை வடிவமைத்தோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

உத்வேகம் கிடைத்தது எப்படி?

‘இப்போதைக்கு முப்பது பேர் பள்ளியில் சேர்ந்திருக்கின்றனர்’ என்று பள்ளியின் முதல்வர் ஆசிப் ஷேஷாத் தெரிவித்தார்.

‘இந்தோனேசியாவில் இயங்கி வந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளியில் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இஸ்லாமிய நாடுகளில் இயங்கி வந்த ஒரே மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளியும் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதே போன்றதொரு பள்ளியை உருவாக்கத் திட்டமிட்டோம்’ என்று ஆசிப் மேலும் தெரிவித்தார்.

டிப்ளமோ படிப்புகளைத் தந்து திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை, தொழிலை ஏற்படுத்தித்
தருவது ஒன்றே பள்ளியின் நோக்கமாகும்.பள்ளியில் சேர்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. 2017 கணக்கெடுப்பின் படி, பாகிஸ்தானில் மொத்தம் 10418 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

பாகிஸ்தானிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.

Related Articles

தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந...
பேரன்பு பேராபத்தானதா? காதல் கொண்டேன் வின... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் காதல் கொண்டேன் வினோத் கதாபாத்திரம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்போம். தன...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! ̵... இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு.எழுத்தாளர் ஜெயமோகனின...

Be the first to comment on "மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்"

Leave a comment

Your email address will not be published.


*