அனிதா நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினார் ராகவா லாரன்ஸ்

Anita Memorial Library: Raghava Lawrence founded

ஏழை எளிய மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களின் இருதய சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டி தருவது போன்ற அறச்செயல்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்.

யோகேஸ்வரனுக்கு வீடு

கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வாலிபர்கள் சிலர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அம்மாபேட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக மின்சாரக்கம்பியை பிடித்ததால் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இந்தாண்டு யோகேஸ்வரனின் முதலாமாண்டு நினைவு நாளில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொடுத்து, உங்களுக்கு நானும் பையன் தான் என்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அனிதாவுக்கு நினைவு நூலகம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இருக்கும் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைவடைந்ததை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் அனிதா நினைவு நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார் ராகவா லாரன்ஸ்.

லாரன்ஸைப் போலவே, நிஜத்திலும் ஹீரோவாகத் திகிழ்கிறார்கள் சில ஹீரோக்கள். பல விமர்சனங்களைச் சந்தித்தாலும் சத்தமின்றி உதவிகள் புரிந்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி. பிரகாஷ், அகரம் பவுண்டேசன் நிறுவனர் சூர்யா போன்றோர் உதவிக்கரம் புரிந்து நிஜத்திலும் ஹீரோவாக திகழ்கிறார்கள்.

Related Articles

லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்... புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு ...
ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்... சட்ட சபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்த காலத்திலிருந்தே அது குறித்து பல்வேறு விவாதங்கள் க...
மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்... இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் ப...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...

Be the first to comment on "அனிதா நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினார் ராகவா லாரன்ஸ்"

Leave a comment

Your email address will not be published.


*