டிரெண்டிங்கால் வந்த வினை! – பிரியா வாரியர் நடித்த பாடல் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!

கேரளா பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து தமிழ் பெண்களின் வயித்தெரிச்சலை சம்பாதிப்பது தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் தலையாய கடமை. இப்படி டிரெண்ட் செய்ததால் ஒரே நாளில் உச்சம் தொட்ட பிரியா வாரியர் நடித்த பாடல் மீது சிலரால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அடார் லவ்

இயக்குனர் ஒமர் லூலு இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியிருக்கும் படம் ஒரு அடார் லவ். இந்த படத்தில் இடம் பெற்ற ” மாணிக்க மலராயி பூவி ” என்ற பாடல் இணையதளங்களில் ஹிட் அடித்தது. இந்த பாடலில் இடம்பெற்ற பிரியா வாரியரின் குட்டி குட்டி ரியாக்சன்ஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது. பலவிதங்களில் ட்ரோலும் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பாடல் வரிகள் மீது வழக்கு தொடுத்து இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் சிலர். இஸ்லாமியர்களை புண்படுத்தும் நோக்கில் இருக்கிறது என்று ஐதராபாத் போலீசிலும், மராட்டி போலீசிலும் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்படி இந்தப் பாடலை தணிக்கை துறையினர் தடை செய்ய வேண்டுமென்றும், யூடியூப்பில் இருந்து இந்தப் பாடலை நீக்க வேண்டுமென்றும் புகார் அளித்துள்ளனர். இதற்கு பதினைந்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று இயக்குனர் ஓமர் லூலுவுக்கு ஐதராபாத் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சமீபகாலமாக படங்களுக்கு அதிக ப்ரோமசன் வேண்டுமென்பதற்காகவே சில சர்ச்சைக்குரிய காட்சிகளை, பாடல் வரிகளை வைக்கின்றனர் சில இயக்குனர்கள். இது சிலருக்கு செட் ஆனாலும் பலரை கவுத்து விடுகிறது. ஒரு வேளை இந்த பாடல் இணையதளங்களில் ஹிட் அடிக்காமல் இருந்திருந்தால் சாதாரண படமாக ரிலீசாகி எந்த எதிர்ப்புகளுமின்றி நல்ல பெயரை கூட சம்பாதித்திருக்கலாம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல் படத்திற்குள் வலுவான கண்டென்ட் இல்லாமல் ஓவர் ப்ரோமோட் செய்வதும் தீங்கு தான்.

Related Articles

மூக்குத்தி அம்மன் திரைப்படம் கற்றுத்தந்த... ஆர் ஜே பாலாஜி யின் இயக்கத்தில் நடிப்பில் உருவான இரண்டாவது படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த சி...
பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒ...
2019ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதி மக்களு... அரவக்குறிச்சி தொகுதி என்றாலே ஓட்டுக்கு அதிகப் பணம் வாங்கும் தொகுதி என்று தான் எல்லோரும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு நற்பெயரை சம்பாதித்திருக்கிறது அரவ...
பொன்னீலனின் பொட்டல் கதைகள் ஒரு பார்வை!... சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் கதை தொகுப்பு தான் " பொட்டல் கதைகள் " புத்தகம்.ஆதிகாலத்து உரல்,மாற்றம், இஞ்சியும் சுக்...

Be the first to comment on "டிரெண்டிங்கால் வந்த வினை! – பிரியா வாரியர் நடித்த பாடல் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!"

Leave a comment

Your email address will not be published.


*