உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர் தற்கொலை முயற்சி

UP man attempts suicide after being forced to drink urine

ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்பூர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் அந்த இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

சஹாரான்பூர் பகுதியில் இருக்கும் இந்திரா நகர் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொடூர தண்டனையை அந்த இளைஞருக்கு வழங்கி இருக்கின்றனர். தற்கொலை முயற்சியை அடுத்து அந்த இளைஞர் அருகிலிருக்கும்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் அந்தப் பெண்ணுக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், அவரை நானோ என்னை அவரோ முன் பின் பார்த்தது கூட கிடையாது என்றும் தெரிவித்து இருக்கிறார். ‘என் வாழ்க்கை குறித்து எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடனடியாக காவல் துறை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவர் மேலும் தெவித்தார்.

காவல் துறையினர் விசாரணை                   

சஹாரான்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் பப்லு குமார இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் போது ‘ அந்தப் பகுதியின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியிடம் இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளச் சொல்லி உத்தரவு இடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Related Articles

நம் நாடு உருப்படாமல் இருப்பதற்கு இடஒதுக்... சாலைகளில் ஜாதிச்சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் நம் சமூகம் இப்போது சமூக வலைதளங்களில் கூட அந்த வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறது.ஒவ்வொரு ஜாதிக்கு...
நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கி... உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அ...
ஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்... இன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...
காதலர் தினத்தில் இந்தப் புத்தகத்தை பரிசள... கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக முக்கியமான கவிதை தொகுப்பு தான் "தண்ணீர் தேசம்". இந்தப் புத்தகத்தை மிக அழகான காதல் காவியம் என்று கூட சொல்லலாம். கலைவண...

Be the first to comment on "உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர் தற்கொலை முயற்சி"

Leave a comment

Your email address will not be published.


*