மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீசனின் மனைவிக்கு என்ன பதில் சொல்லப் போறோம்?

வள்ளியூர் அருகே விஜய நாராயணம் சிற்றாற்று பகுதியில் மணல் திருடப் படுவதாக தகவல் கிடைத்து சோதனைக்கு சென்ற காவலர் ஜெகதீசனை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று உள்ளது. கர்ப்பமாக இருக்கும் அவருடைய மனைவிக்கு இந்த செய்தி எப்படிபட்ட அதிர்ச்சியை தந்து இருக்கும். தகவல் கிடைத்ததும் மற்ற அரசு ஊழியர்களைப் போல, காவலர்களைப் போல எனக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்திருந்தால் அவருக்கு இந்த கதி நேர்ந்து இருக்குமா? நேர்மையாகப் பணி ஆற்றியதன் விளைவு இன்று அவர் உயிருடன் இல்லை. நேர்மையாக பணி ஆற்றியது ஒரு குற்றமா? ஏன் நேர்மையானவர்களை இந்த உலகம் புறக்கணித்து கொண்டே இருக்கிறது.

 

மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு?

தடை விதிப்பது, அபராதம் விதிப்பது, தண்டனை கொடுப்பது போன்ற பாசாங்கு வேலைகளை செய்து கொண்டிருக்கும் தற்போதைய ஆளுங்கட்சி அரசே இந்தக் குற்றச் செயலுக்கு துணை புரிகிறதாக சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. இது உண்ம் என்றே எடுத்துக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் மணல்கள் அரசியல்வாதிகள் துணையுடன் அரசு அதிகாரிகளுடன் கொள்ளை போகிறது. பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தான் தற்போது அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில்  ஒவ்வொரு மூட்டையாக எடுத்துச் சென்றும் இரவு வேளைகளில் மாட்டு வண்டிகள் மூலமாக எடுத்துச் சென்றும் மணல் கடத்தல் நடை பெற்று வருகிறது. இந்த முறையில் மணல் கொள்ளை செய்து குடோன் அமைத்து வைத்தவர் அப்பகுதி கனிம வளத்துறை அதிகாரி ஜெயந்தியால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆறுகள் சிதைந்து கொண்டிருக்கிறது.

 

Related Articles

நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி... 71 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் கொல்லப்பட்டு இருக்க...
2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நா... கற்றது தமிழ் படம் வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  அந்தப் படத்தின் கதை எழுதி 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.  அப்போது ஒரு பட்டதாரி இளைஞனுக்கு ம...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...
உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு... உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் ...

Be the first to comment on "மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீசனின் மனைவிக்கு என்ன பதில் சொல்லப் போறோம்?"

Leave a comment

Your email address will not be published.


*