முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு?

11th std board exams

பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம்
வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண்டாம்
வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாலும் கல்லூரிகளில் காலடி எடுத்து
வைத்ததும் மிகப்பெரிய சறுக்கலை காண்கிறார்கள். இந்த வருட அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களின் முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால் அதன் தாக்கம் புரியும்.

பதினோறாம் வகுப்பு கணித பாடத்தை படிக்காததன் விளைவு பொறியியல் கல்லூரிகளில்
மாணவர்கள் எம் ஒன் முதல் எம் ஒன் வரையிலான காலகட்டதை மிகுந்த சிரமத்துடன் கடக்க
நேரிடுகிறது.

இன்ஜினியரிங் மாணவர்களின் நிலைமை தான் இப்படியென்றால் மருத்துவ மாணவர்களின்
நிலைமை அதைவிட பரிதாபமாக உள்ளது. அடிப்படை பாடங்களான பதினோறாம் வகுப்பு
உயிரியல் பாடங்களை படிக்காமல் செல்வதால் முதல் இரண்டு ஆண்டுகள் மிகுந்த சிரமத்துக்கு
உள்ளாகின்றனர். அது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்பதால் அந்தத்
தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் பதினோறாம் வகுப்பு பாடங்களுடன்
தொடர்புடையது. அதனால் தமிழக மாணவர்கள் பலரும் நல்ல கட்ஆப் பெற்றிருந்த போதிலும்
நீட் தேர்வில் பலத்த அடியை சந்தித்தனர்.

இந்நிலையில் இது போன்ற குளறுபடியான சூழல்களைத் தவிர்க்க இந்தாண்டு முதல்
பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டது.

எப்படி இருக்கு?

கடந்த சில தினங்களுக்கு முன்பு பதினோறாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் நடைபெற்ற கணிதத்தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் சிலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். வினாத்தாள்கள் சிபிஎஸ்இ போன்று பாடத்திற்கு உள்ளிருந்து
கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் படித்ததெல்லாம் பாடபுத்தகங்களில் குறிபிட்டிருக்கும் வினாக்களை மட்டுமே
படித்தோம். ஆதலால் பாடத்திற்கு உள்ளிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்
வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவ மாணவிகள் தரப்பு இப்படியென்றால் ஆசிரியர்கள், ” வினாத்தாளை மாணவர்கள் மன
நிலையில் இல்லாமல் ஆசிரியர் மனநிலையில் இருந்து பார்த்தால் வினாத்தாள் எளிமையானதே.
பல வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டுள்ளது. பாடபுத்தகங்களை அந்த அளவுக்கு
நுணுக்கமாக கற்பிக்கும் அளவுக்கு ஆசிரியர்களுக்கு போதிய பாடவேளைகள் பத்தவில்லை ”
என்று கூறுகிறது.

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தால் பண்ணிரண்டாம் வகுப்பு
படித்துக்கொண்டே தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என்ற ஐடியா நன்றாக இருந்தாலும் அவர்கள்
பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களில் கவனம் செலுத்திக் கொண்டே இதையும் படிப்பதென்பது
சிரமமான ஒன்று. ஆகவே பதினோறாம் வகுப்பு தேர்வு குறித்து கவனம் மேற்கொள்வது
பள்ளிக்கல்வித்துறையின் கடமை.

Related Articles

வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வர... ஆண்டாள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சை எதிர்த்து வரும் விமர்சனங்களில் வார்த்தைகள் வரம்பு மீறிச் செல்கிறது. இந்த வரம்பு மீறும் வார்த்தைகள் ஏற்க...
சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம... நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்... ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு......
பிரேமலதா விஜயகாந்துக்கு பைத்தியம் பிடித்... சுபஸ்ரீ சாக வேண்டும் என்பது விதியா? பிரேமலதா விஜயகாந்த் பேசியது சரியா? அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுள் ஒன்று விஜய்காந்த்தின் தேமுதிக. ஆரம...
37 ஆண்டுகளாகத் தினம் ஒரு மரம் நட்டுவரும்... காட்டை அழிப்பது இன்று லாபம் ஈட்டும் தொழில். கட்சி வித்தியாசம் இல்லாமல் பாரபட்சம் இன்றி  காடுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. ஆனால் முப்பத்து ஏழு ஆண்டுகளா...

Be the first to comment on "முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு?"

Leave a comment

Your email address will not be published.


*