12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை

12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தே விலை டீசலுக்கு 24 பைசா என வைத்து லிட்டருக்கு 77 . 83 ரூபாயாக மும்பையில் விற்கப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோலுக்கு 36 பைசா உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 77.83 ரூபாய் எனவும்,டீசலுக்கு 22 பைசா உயர்த்தப்பட்டு 68.75  ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.

கடந்த 12 நாட்களில் மட்டும் மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 11.02 ரூபாயும்,டீசலுக்கு 7.27 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான்  இதுகுறித்து பேசும் போது ‘அரசு தலையிட்டு இந்த  விலை உயர்வைக் குறைக்கும்’ என்றார்.

 

ஈரான் மற்றும் வெனிசுலாவில் சாதகமற்ற நிலை

மத்திய அமைச்சர் இது குறித்து பேசும் போது ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மானியம் அளிக்கும் பட்சத்தில் அரசின் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி இல்லாமல் ஆகும்’ என்றார்.  இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை மற்றும் வெனிசுலாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தல் ஆகியன விலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.

இந்திய எண்ணெய்  நிறுவனம் தனது ஆண்டு தேவையில் எழுபது சதவீதத்தை மத்திய கிழக்கு உற்பத்தியாளர்களிடமிருந்தே கேட்டு பெறுகிறது. இந்திய எண்ணெய் நிறுவன  தலைவர் சஞ்சீவ் சிங், ஈரானில் இருந்து இறக்குமதியைக் குறைக்க மத்திய  அரசாங்கம் இதுவரை எந்த ஒரு அறிவுறுத்தலையும் தரவில்லை  என்றார்

Related Articles

இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! ... கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அ...
தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட்... தலைமை நீதிபதி  உத்தரவு: இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை...
தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கு... ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந...
13 years of சித்திரம் பேசுதடி – மா... வேலையில்லாத இளைஞன் செக்யூரிட்டி வேலைக்குச் சேர முயல்கிறான். அந்த சமயத்தில் ரௌடியின் மகனை நாயகன் இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்ற, ரௌடியிடம் நாயகனுக்க...

Be the first to comment on "12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை"

Leave a comment

Your email address will not be published.


*