காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!

காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படம் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் வெற்றி விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சத்யராஜ் வழக்கம் போல நக்கலும் நைய்யாண்டியுமாகப் பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

அப்போது சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவை நிகழ்ச்சி தொகுப்பாளர் ட்யூட் விக்கி மேடைக்கு அழைக்க மேடை ஏறிய மகளை சத்யராஜ் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னார். அப்பா சொன்னதை கேட்டு ஆராதனாவும் சத்யராஜ் காலில் விழ சத்யராஜோ ஆராதனாவை அடிக்க செல்லமாக கை ஓங்கினார். பிறகு ஆராதனாவை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார். இந்த இடத்தில் நின்னுட்டார் மனுசன்!

ஒரு மனிதன் சக மனிதனின் காலில் விழுவது முட்டாள்தனம் என்ற கொள்கையுடன் ஏராளமானோர் சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், சூர்யா, அமீர், அனிருத் போன்றோர். பல இடங்களில் காலில் விழுந்த மனிதர்களை திட்டியும் அடித்தும் இருக்கிறார்கள்.

காலில் விழுவது முட்டாள் தனம், அது ஒரு பாசாங்கான வேலை என்று சாதாரண மக்களும் எப்போது நம்பத் தொடங்குவார்களோ! அரசியல்வாதிகளா நீங்கள்! எதற்கெடுத்தாலும் தொப் தொப் என காலில் விழ… சத்யராஜிடம் இருந்து சிவகார்த்திகேயன் கற்றுக் கொள்ள வேண்டிய விசியம் அது. பொது மேடையில் சிக்கல் இல்லாமல் நக்கலாகப் பேசுவது எப்படி என்பதை சத்யராஜிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கற்றுக் கொள்ள வேண்டும்.

Related Articles

மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!... ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை. ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவ...
அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வ... யார அதிகம் நேசிக்கிறமோ அவிங்கள தான் அதிகம் வெறுக்கிறோம்... என்ற தத்துவத்துடன் தொடங்குகிறது படம்.  ஸ்டைலிசான லவ் படம்ங்கற பேருல என்னத்தயோ எடுத்து வச்சி...
அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...
ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுக... வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவ...

Be the first to comment on "காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!"

Leave a comment

Your email address will not be published.


*