காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!

காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படம் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் வெற்றி விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சத்யராஜ் வழக்கம் போல நக்கலும் நைய்யாண்டியுமாகப் பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

அப்போது சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவை நிகழ்ச்சி தொகுப்பாளர் ட்யூட் விக்கி மேடைக்கு அழைக்க மேடை ஏறிய மகளை சத்யராஜ் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னார். அப்பா சொன்னதை கேட்டு ஆராதனாவும் சத்யராஜ் காலில் விழ சத்யராஜோ ஆராதனாவை அடிக்க செல்லமாக கை ஓங்கினார். பிறகு ஆராதனாவை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார். இந்த இடத்தில் நின்னுட்டார் மனுசன்!

ஒரு மனிதன் சக மனிதனின் காலில் விழுவது முட்டாள்தனம் என்ற கொள்கையுடன் ஏராளமானோர் சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், சூர்யா, அமீர், அனிருத் போன்றோர். பல இடங்களில் காலில் விழுந்த மனிதர்களை திட்டியும் அடித்தும் இருக்கிறார்கள்.

காலில் விழுவது முட்டாள் தனம், அது ஒரு பாசாங்கான வேலை என்று சாதாரண மக்களும் எப்போது நம்பத் தொடங்குவார்களோ! அரசியல்வாதிகளா நீங்கள்! எதற்கெடுத்தாலும் தொப் தொப் என காலில் விழ… சத்யராஜிடம் இருந்து சிவகார்த்திகேயன் கற்றுக் கொள்ள வேண்டிய விசியம் அது. பொது மேடையில் சிக்கல் இல்லாமல் நக்கலாகப் பேசுவது எப்படி என்பதை சத்யராஜிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கற்றுக் கொள்ள வேண்டும்.

Related Articles

2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் ... கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இன்று மீம் என்பது கலை வடிவமாகப் பார்க்கப் படுகிறது. பல சமூக மாற்றங்களும் சி...
அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூ... ஹைபோநெட்ரீமியா(hyponatremia) என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்...
பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க... இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...

Be the first to comment on "காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!"

Leave a comment

Your email address will not be published.


*