ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை.
ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவிடும்.
கடவுளால் எல்லாவற்றையும் பார்க்க முடியுமனால் இன்னும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்.
எலிகளின் மீது பூனை சத்தம் போடத்தான் செய்யும்.
மனிதனின் ஆசைக்கு அளவு இல்லை. அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை.
நட்பு என்பது காளானைப் போல் காட்டிலே வளர்வதல்ல. நட்பு இதயத்தில் தான் வளர்கிறது.
நீ செய்யும் காரியத்துக்கு நீயே பொறுப்பாளியாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.
மக்களிடம் வலிவும் ஊக்கமும் மிகுதியாக இருந்தால் தான் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
உண்மை ஒரு சக்தி. அதைக் கண்டறியத் தான் வேண்டும்.
வாழ்க்கை அமைப்பில் உள்ள குறைபாடுகளினால் தான் மக்கள் குற்றவாளியாகிறார்கள்.
உதிர்ந்து போன சருகு ஒன்றும் அதன் விருப்பபடி காற்றினால் அடித்துச் செல்லப்படுவதில்லை.
நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால் காட்டில் வெறும் இறகுகள் தான் மிஞ்சும் பறவைகள் மிஞ்சாது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் தீமையால் பாதிக்கப்படுகிறோம். ஆனால் நன்மையோ எதிர்பாராத நேரங்களில் தெரியாத இடங்களிலிருந்து அரிதாகத் தான் நம்மை வந்து அடைகிறது.
நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத் தான் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள். அகில உலகத் தொழிலாளர்களின் வெல்லற்கரிய சகோதரத்துவம் என்னும் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்.
மனித உடலை பிணித்திருக்கும் விலங்குகளையும் அறிவை அடிமைப்படுத்தி இருக்கும் தளைகளையும் தகர்த்து எறிபவர்களே வணங்கத்தக்க மாமனிதர்கள்.
ஆத்மாவை இழந்துவிட்டு வாழ்வது மரணத்தைவிட மேம்பட்டது என்று எவன் சொல்லமுடியும்.
வேலை என்பது ஓர் உணவு என்று கருதி அதனை ஓர் உவப்போடு முழுமையாகச் செய்து முடிப்பவனே சிறந்த வேலைக்காரன்.
நம்ம வேலைக்காரன் அவனது எஜமானனுக்கே சமமானவன். ஏனெனில் தொழிலில் பாதி வெற்றி அவனால்தான்.
சாவதற்கு முன்னால் நாம் ஒருமுறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்ல வேண்டும்.
சினம் என்பது கனலிலிருந்து தான் பிறக்கிறது. நெஞ்சில் கனல் உள்ள மனிதன்தான் சினத்தையும் உணர முடியும்.
பூமியை நாம் காயப்படுத்தினால் அது நம் எல்லோரையும் தன் குருதியால் மூழ்கடிக்கும். பொசுக்கிவிடும்.
வாழத் தெரியாதவர்கள் படுத்து உறங்கி இருப்பார்கள். வாழ்வில் இன்பம் காண்பவர்களே பாடுபடுகிறார்கள்.
நிழலும் தராமல் பழமும் கொடுக்காமல் இருக்கும் மரத்தினால் யாருக்கு என்ன பயன்?
மனித சிந்தனையும் மனித உழைப்பும் சாதித்து வெற்றி கண்ட சகல பொருள்களையும் நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
மனிதன் வாழ்கிறான். அவனைச் சுற்றிலும் எதுவும் மாறுவதில்லை என்றால் அது மிகவும் கடினமான துன்பகரமான வாழ்க்கை.
தன்னுடைய சொந்த சக்தியை பயன்படுத்தி ஒருவன் ஒரு பொருளை செய்வதற்குத் தான் உழைப்பு என்று பெயர்.
பிறரை அடிக்கடி சிறிய காரணங்களுக்காக திட்டுவது முட்டாள்தனத்தின் முதிர்ச்சி ஆகும்.
Related Articles
வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் ... மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானி...
தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு த... தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் ...
ரஜினி தனிக்கட்சி! கமல் தனிக்கட்சி! ̵... கமல், நான் தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து நிற்க போகின்றேன் என்று சில நாட்களுக்கு முன்பே தன் முடிவை சொல்லிவிட்டார்.
இவ்வளவு நாள் இழுக்கடித்து இந்தாண்டி...
பிரதமர் மோடியின் பயிர் காப்பீடு திட்டத்த... பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்திருப்பது விவசாய அமைச்சகத்தின் கடந்த ஆண்ட...
Be the first to commenton "மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!"
Be the first to comment on "மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!"