பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட்டுப்பா! – டூலெட் விமர்சனம்

Tolet movie Review

நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குனராக அவதாரம் எடுத்த செழியன் முதல்முயற்சியிலயே தேசிய விருதையும் வென்றுவிட்டார். பார்வையாளர்களின் மனதை வென்றாரா என்பதைப் பார்ப்போம்.

வழக்கம்போல நல்ல சினிமா ஓடக்கூடிய சின்ன தியேட்டரில் இருபது பேர் பார்வையாளராக இருக்க படம் தொடங்கியது. (இதற்குமுன் நடுநிசி நாய்கள் என்ற படம் பின்னணி இசையே இல்லாமல் வெளியாகி உள்ளது) பிண்ணனி இசையே இல்லை என்ற குறையையே மனதில் ஏற்படுத்தாமல் ஒரு சிறுகதையைப் போல வரி வரியாக காட்சி காட்சியாக மிதந்து சென்று பார்வையாளருக்கு வாழ்ந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் படம்.

2007 ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் வாடகை வீடுகள் தேடி அலைந்தவர்கள் என்னென்ன சவால்களை, அவமானங்களை சந்தித்தார்கள் என்பதுதான் மையக்கரு. இந்தக் கருவையை குருவி கூடுகட்டுவது அழகாக செதுக்கி வைத்திருக்கிறார் செழியன். வாடகை வீட்டு ஓனரம்மா வாடகை பணத்தை வாங்கி முதுகை சொறிவதாகட்டும், ஓனரம்மா திட்டியதால் சுவற்றில் வரைந்து வைத்ததை ரப்பர் வைத்து அழிக்கும் சிறுவனாகட்டும், சினிமாக்காரனுக்கு வீடு கிடைக்காது என்பதால் பொய்யான விசிட்டிங் கார்டு கொடுப்பதாகட்டும்… எல்லாமே சின்ன சின்ன கவிதைகள் மாதிரி திரையில் தெரிகிறது.

பாலுமகேந்திராவின் வீடு படத்தை பல இடங்களில் நினைவூட்டினாலும் ஒட்டுமொத்த படமாகப் பார்க்கும்போது இந்தப் படம் தனித்து தெரிகிறது. உதிரிப்பூக்கள், பூ, நண்டு, படங்களைப் போல டூலெட் சிறுகதை அழகாகப் படம் பிடிக்கப்பட்டு பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்கிறது.

டூலெட் – வாடகைக்கு வீடு தேடி அலைந்தவர்களுக்கு அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல்!

Related Articles

தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்க... குறைந்த விலை சானிட்டரி நாப்கின் தயாரித்து புரட்சி செய்த அருணாசலம் முருகானந்தம் அவர்களின் கதையை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்மேன். அருணா...
ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் ... ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொ...
அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யா... மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்ச...
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் இளைஞர்... இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வரை அரசாங்க பணி என்பது ஜாதி அடிப்படையில் இருந்தது.  யார் அதிக நிலபுலம் வைத்திருக்கிறார்களோ யார் அதிக மக்களை தனக்கு கீழ்...

Be the first to comment on "பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட்டுப்பா! – டூலெட் விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*