விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்சினை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவன் என்று சொன்னார். அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டால் படம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது. விஸ்வரூபம் மட்டும் அல்ல கமலின் பெரும்பாலான படங்களுக்கு இது போன்ற எதாவது ஒரு சர்ச்சைகள் கிளம்பி படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாளோ அல்லது படம் ஆகும் அன்றோ யாராவது வந்து முட்டுக்கட்டையாக நின்று பிரசர் ஏற்றிவிடுவார்கள்.

தற்போது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் பத்தாம் தேதி ரிலீஸ் என்று அனைத்தும் முடிவாகி விட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்துக்கு ஒரு புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.   ( கமல் படத்துக்கு சர்ச்சை வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவ்விதத்தில் பாபநாசம் எப்படியோ தப்பித்துவிட்டது ). ட்ரெயலரில் சில காட்சிகள் கொஞ்சம் ஆபாசமாக இருந்ததால் இது இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் இரண்டாம் பாகம் போல இருக்கு… நிச்சயம் படம் ஹிட்டு தான்… என்று பலர் கிண்டல் அடித்து வருகின்றன.

இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீப காலமாக கமலுக்கு மிகப் பிடித்த இசையமைப்பாளராக மாறிவிட்டார். பாபநாசம், தூங்காவனம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 என்று தற்போதைய படங்களுக்கு அவருடைய இசை தான். இது வரைக்கும் ஜிப்ரான் தனது பெயரை எம். ஜிப்ரான் என்று மட்டுமே படத்தில் இடம்பெறும்படி செய்திருந்தார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்துக்கு மட்டும் முகமது ஜிப்ரான் என்று போட்டிருந்தார். கமலை காலி செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த ஒரு காரணம் போதாதா… இதைப் பிடித்துக் கொண்டு மீண்டும் சர்ச்சையை உண்டாக்க முயல, இசையமைப்பாளர் ஜிப்ரானோ அதற்கு தொடக்கத்திலயே, ” விஸ்வரூபம் பட வேலைகளின் போது நான் நோன்பில் இருந்தேன்…  ஆத்மாத்மாக செய்த படம்… நானே விருப்பபட்டு தான் என் பெயரை அப்படி போடச் செய்தேன்… ” என்று பதில் கூறி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சர்ச்சைகள் இத்துடன் முடியப் போவது இல்லை. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது, ” இந்தப் படத்திற்காக என்ன பிரச்சினை வந்தாலும் அதை நான் எதிர்கொள்வேன்… இப்போது நான் நடிகன் மட்டும் அல்ல… அரசியல்வாதியும் கூட… ” என்று கமல் கூறியிருப்பதால் இன்னும் சில நாட்களில் பலத்த எதிர்ப்புகள் வந்தாலும் வரும்.

Related Articles

பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளை... தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில், கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி...
சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக... புனே மற்றும் கொல்கத்தாவில் அமைந்திருப்பது போல சேட்டிலைட் நகரம் ஒன்றை சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் உருவாக்க மாநில திட்டமிடல் துறை திட்டமிட்டு இருக்க...
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196... தமிழகத்தில் நீட் தேர்வு வந்த பிறகு, பல குளறுபடிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகள் காரணமா...
இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை.... வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது த...

Be the first to comment on "விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்சினை!"

Leave a comment

Your email address will not be published.


*