புலியை விறகால் விரட்டி அடித்து மகளை காப்பாற்றிய தாய் – வால்பாறை மக்களின் கவலநிலை

தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை கவலைக்குரியது. வனவிலங்குகளின் தொல்லை அளவுக்கு அதிகமாகவே இருக்கும். சாதாரணமாக அவர்களால் பொதுவெளியில் நடந்து செல்ல முடியாத நிலை.

அது போல வால்பாறை அருகே ஒரு சம்பவம் நடந்து உள்ளது. வால்பாறையில் தேயிலை பறிக்கும் கூலி தொழில் செய்து வருபவர் முத்து மாரி. அவருடைய மகள் சத்யா ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் வழக்கம் போல வீட்டிற்கு அறுகே விளையாண்டுக் கொண்டிருக்க, அப்பகுதில் சுற்றித் திரியும் புலி ஒன்று அந்தச் சிறுமியை அடித்து இழுத்துச் செல்ல முயன்று இருக்க, பயத்தில் அந்தச் சிறுமி தன் அம்மாவை அழைத்து இருக்கிறாள். மகளின் சூழலை உணர்ந்த தாய் வேகமாக ஓடிச் சென்று அருகே கிடந்த விறகுக் கட்டையை எடுத்து அடித்திருக்கிறாள். அப்போதும் புலி குழந்தையை விட்டபாடில்லை. அதனை அடுத்து மீனாம்பாள் என்ற பக்கத்து வீட்டுப் பெண்மணி ஓடிவந்து இன்னொரு விறகுக் கட்டையை எடுத்து புலியை அடித்து விரட்டி இருக்கிறார்.

தற்போது சத்யா என்ற சிறுமி அருகே இருக்கும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சம்பவம் சத்யாவுக்கு மட்டும் நேர வில்லை. அங்கே இருக்கும் பல தொழிலாளிகளுக்கு இந்த நிலைமை நடந்து உள்ளது. அங்கே வசித்து வரும் மக்கள் அனைவரும் எப்போதும் பயத்துடனே வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது என்பதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலங்குகளின் நலன் பற்றிய அக்கறை

வன விலங்கு தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இருந்தும் பல விலங்குகள் கொல்லப் பட்டும் வனப்பகுதிகள் சூரையாடப் பட்டும் வருகிறது. அதனாலயே வனவிலங்குகள் அனைத்தும் பசிக்காக உணவு தேடி மக்கள் வசிப்பிடங்களில் வந்து அட்டகாசம் செய்வதுடன் மக்கள் உயிரையும் சில சமயங்களில் பறித்து விடுகிறது. மக்கள் போராட்டம் நடத்தி உயிரை இழந்த பிறகு  தான் நடவடிக்கை எடுப்பேன் என்று இல்லாமல் உடனே அரசு நடவடிக்கை எடுத்தால் பல உயிர்கள் தப்பும்.

Related Articles

ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூ.1லட்... சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் ஆனந்தனை...
தண்ணீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்பத்தை ... தண்ணீரைச் சேமிப்பதற்காக மாற்றுத் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது சென்னை மெட்ரோ. ஒரு நாளைக்கு குளிரூட்டிகளுக்காக(Air Conditioners) மட்டும் 20000 லிட...
கவிஞர் நரன்! – தமிழ் இலக்கிய உலகிற... "அன்பின் அன்பர்களே"இப்படித்தான் எந்த மேடையிலும் தனது உரையைத் தொடங்குவார் நரன்.  அன்பின் அன்பர்களே என்று உரையைத் தொடங்கும் நபர்கள் வேறு யாராவது இரு...
அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...

Be the first to comment on "புலியை விறகால் விரட்டி அடித்து மகளை காப்பாற்றிய தாய் – வால்பாறை மக்களின் கவலநிலை"

Leave a comment

Your email address will not be published.


*