இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருக்கிறது!

மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி சொல்லி மாளாது.

மருத்துவ சீட் பெறுவதில் நிறைய முறைகேடு நடக்கிறது அதனை தடுக்கத் தான் நீட் தேர்வு கொண்டு வந்தோம் என்கிறது மத்திய மாநில அரசு. இந்த நீட் தேர்வினால் அனிதா உயிரிழந்த போது தின இந்துவில் நடிகர் சூர்யாவின் நடுப்பக்க கட்டுரை வெளியானது. உடனே அடுத்த நாளே அதை எதிர்த்து தமிழிசை சவுந்தர்ராஜன், ” தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டது. அப்போது எல்லாம் சூர்யா எங்கே போனார் ” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அப்படி கேள்வி எழுப்பியதால் சூர்யா ரசிகர்களிடம் வகையாக வாங்கிக்கொண்டார். நியாயப்படி அந்த சமயங்களில் குரல் கொடுத்து அந்த கல்விச் சுரண்டலை தடுத்திருக்க வேண்டியது நல்ல அரசியல்வாதியின் வேலை. அது நடிகரின் வேலை அல்ல.

இன்னும் சில தினங்களில் பொறியியல் கல்லூரிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் செய்திகள் வந்துகொண்டிருந்தது. இப்போது அது உறுதி என்பது தெரிய வந்துள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவி செய்த ஒரு உருப்படியான விஷியம் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பிய நீயா நானா நிகழ்ச்சி தான். ஏழ்மை நிலையில் இருந்து கொண்டும்

பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் இடம் பெற்றிருந்தனர். அந்த மாணவர்கள் தங்களது அப்பாவின் இயலாமையையும் இன்னொரு அப்பாவாக, அம்மாவாக இருக்கும் ஆசிரியர்களைப் பற்றியும் பேசியது சமூக வலை தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் தின இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ். இன்றைய கல்வி சூழலை பற்றி பேசியவர் இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருக்கிறது என்றும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தகவல் தெரிவித்தார். மொத்ததில் இன்ஜினியரிங் கல்லூரிகள் செய்து வரும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் போதும் என்ற கருத்து ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் இன்ஜினியரிங் படிப்பும் ஏழை மாணவர்களுக்கு எட்டாத படிப்பாக மாறிவிடுமோ என்ற பயமும் இருக்கத் தான் செய்கிறது.

Related Articles

முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்... மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பாரத பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்ட் 13) அந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. அந்த நிகழ்ச்சியில் ...
விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் ம... தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த...
தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் – பாத... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் எங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்த...
எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்க... தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், ...

Be the first to comment on "இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருக்கிறது!"

Leave a comment

Your email address will not be published.


*