இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்!

Young people must read Ambedkar's Castes in India book!

இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக இந்த சாதி பெண்களை என்ன செய்கிறது? இப்படி பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கிறது. ஆனால் வெகுஜன ( பாமர மக்கள்) மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மொழிநடை இல்லை என்பது குறையாக காணப்படுகிறது. இருப்பினும் முதிர்ந்த இளைஞர்கள் இந்தப் புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல கருத்துக்களில் சில விஷியங்கள் இங்கே :

* உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடாயாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.

* நடைமுறையில் சாதி என்பது மாபெரும் பின்விளைவுகளை முன் அறிகுறியாகக் காட்டும் ஒரு அமைப்பாகும். சாதிச் சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல் ; ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது.

* மானுடவியல் அறிஞர்களின் கூற்றுப் படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் பல்வேறு திசைகளிலிருந்தும் பல வகைப்பட்ட பண்பாடுகளோடும் இந்தியாவுக்குள் நுழைந்த பழங்குடிகளாவர்.

* புரோகித சாதியே உயர்நிலையிலிருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதாலேயே சாதி அமைப்பு முறையோடு தீட்டு பற்றிய கருத்து பிணைக்கப்பட்டுள்ளது. புரோகிதரும் தூய்மையும் தொன்று தொட்டு வரும் கூட்டாளிகள் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சாதி என்பது மதத்தின் நறுமணத்தோடு மணக்கும் அளவுவரை தீட்டு பற்றிய கருத்து சாதியத்தின் ஒரு பண்பாகும்.

* இந்திய மக்களை பொறுத்தமட்டில்,

1. புறமணம் என்பது எவரும் மீளத் துணியாத ஒரு சமயக் கோட்பாடாகவே உள்ளது.

2. சாதிகளின் படைப்பு என்பது புறமணத்தை விட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிப்பது.

* இந்தியாவில் சாதிகளின் தோற்றம் பற்றிய வினாவை விடச் சாதிகள் எவ்வாறு பரவின என்பது பெரும் தொல்லைக்குட்பட்டு நிற்பதாகும்.

*வர்க்கம் பற்றிய விவரிப்பு
1. பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம்

2. சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம்

3. வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம்

4. சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம்

* போலச் செய்தல் மனப்போக்கு

இப்படி தெரிந்துகொள்ள வேண்டிய விஷியங்களும், பிற நாட்டு அறிஞர்கள் இந்தியாவில் உள்ள சாதிகளைப் பற்றி என்ன கூறுகிறார்கள் போன்ற விஷியங்களும், நம் நாட்டு தலைவர்களுக்கு அம்பேத்கர் சாதி குறித்து எழுதிய கடிதங்கள் எப்படிப்பட்டவை என்பனவும் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கிறது.
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ரூ. 120

Related Articles

பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவ... ஆரம்ப காலங்களில் விசேஷ வீடுகளில் பந்தி என்பது தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். அப்போதெல்லாம் மண்தரையில் சாணி மொளங்கில் அமர்ந்து சாப்பிடுவத...
125 விருதுகளை வென்ற தமிழ் குறும்படம் ... சில தினங்களுக்கு முன்பு திருச்சியை கதைக்களமாகக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "முதலிடம் நோக்கி" என்ற குறும்படம் சமூக வலைதளங...
சாவு வீட்டில் சிரித்துக்கொண்டே செல்ஃபி எ... இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது சொல்லாக மட்டும் தான் இருக்கிறதே தவிர செயலில் யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...

Be the first to comment on "இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*