ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1850 பேர் போட்டி! – பட்டதாரிகள் உட்பட 15,000 பேர் விண்ணப்பம்!

job

தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை வளர்ப்பு உதவி பணியாளருக்கு எம்.பி.ஏ, பி.எச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தான் இந்த நிலைமை என்றால் இந்தியா முழுக்க பெரும்பாலான மாநிலங்களில் இந்த நிலைமை தான் நிலவி வருகிறது.

ஹரியானா – நீதிமன்றத்தில் பியூன் பணி

ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் என்ற மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு பியூன் பணியிடங்களுக்கு பதினைந்தாயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆய்வு படிப்பு படிப்பவர்கள் என்று விண்ணப்பித்தவர்கள் பலவகை. கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ஜிந்த மாவட்ட அமர்வு நீதிமன்றம் எட்டு பியூன் மற்றும் ஒரு புரோசர்ஸ் சர்வர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் இந்த பணிக்கு. விண்ணப்பித்தவர்களை குற்றம் சொல்லி என்ன பயன். இந்திய கல்வி முறை அந்த லட்சணத்தில் இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் அவனுக்கு சல்யூட் அடித்து குமாஸ்தா வேலை பார்ப்பதற்காக அவன் உருவாக்கிய கல்வி முறை தான் இன்றும் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. அதிலும் பல்வேறு படிநிலைகள் வேறு.

இப்போது தமிழ்நாட்டிற்கு வருவோம். மாணவர்கள் தற்கொலையில் முதலிடம் வகித்து “பெருமை” பெற்று வருகிறது. பக்கத்து மாநிலமான கேரளா நம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது. நாமும் பே என்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

கொக்கி குமார்களின் கையில் கல்வி நிறுவனங்கள்!

ரிலீசான பொழுது கடுமையாக விமர்சிக்கப்பட்டு புறந்தள்ளிவிட்டு இப்போது ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு வரும் படம் பபுதுப்பேட்டை. அதில் கடைசி காட்சியில் கொக்கி குமார் தற்போது பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார் என்று டைட்டில் கார்டில் வரும். இது முற்றிலும் உண்மை. தமிழகத்தில் புற்றீசல்போல பொறியியல் கல்லூரிகள் பெருகியதற்கு காரணம் இந்த கொக்கி குமார்கள். மனிதனின் அடிப்படை உரிமை கல்வி பெறுவது. அதை இலவசமாக தரவேண்டும். ஆனால் இதை வியாபாரமாக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். நாமும் செம்மறி கூட்டமாய் அவர்கள் கல்லாவை நிரப்பி அவர்களின் பத்தாவது தலைமுறை சொகுசாக வாழ்வதற்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்!

இன்றைய நிலவரப்படி 30 சதவீதம் மாணவர்கள் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அத்தகைய கல்லூரிகளின் எண்ணிக்கை 142 – 177 ஆக அதிகரித்திருப்பதாக ஜனவரி 1 அன்று மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைவான மாணவர்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடமும் உத்திரப்பிரதேசம் இரண்டாமிடமும் வகிக்கிறது.

இப்படியே போனால் 2020ல் அல்ல 2100ல் கூட இந்தியா வல்லரசாகாது.

Related Articles

கக்கனையும் காமராஜரையும் நாம தான் தேடி கண... " நான் எந்த கம்பெனியும் விலைக்கு வாங்கவும் வரல... அழிக்கவும் வரல... இன்னிக்கு என்ன நாள்... தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாள்... நா என்னோட ஓட்டுப் போட...
நொந்து போன Aircel பயனாளர்கள் – திவ... கடந்த சில நாட்களாகவே ஏர்செல் நிறுவனத்தை பற்றி அரசல்புரசலாக செய்தி வெளியானது. அதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது ஏர்செல் சிக்னல் கிடைக்காமல...
பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா? நூறு... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் ரூபாய் பரிசுடன் வருடந் தோறும் வழங்கப் படும் வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங...
உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை... பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்...

Be the first to comment on "ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1850 பேர் போட்டி! – பட்டதாரிகள் உட்பட 15,000 பேர் விண்ணப்பம்!"

Leave a comment

Your email address will not be published.


*