வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?

Alexa

தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. இப்போது தொழில்நுட்பம் சக மனிதனின் அருகாமை போன்ற ஒன்றையே உருவாக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் குரலுக்கு கட்டுப்படும் மனிதர் அல்லாத திறமையான ஒரு தனி உதவியாளரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அமேசான் அலெக்ஸ்சா

மின் வணிகத்தில் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனத்தின் அறிமுகம் தான் இந்த அலெக்ஸ்சா. குரலின் மூலம் கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்தத் தனி உதவியாளர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்ந்தெடுத்துக் கேட்பது, செய்யவேண்டியதைப் பட்டியலிட சொல்லிக் கேட்பது, வானொலி கேட்பது, இணையத்தில் தேடுவது, வானிலை அறிக்கைகளைத் தெரிந்து கொள்வது, இணையத்தில் பொருட்கள் வாங்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம், குறிப்பாக இந்தக் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் குரல் மூலம் மட்டும் உங்கள் தனி உதவியாளரான அலெக்ஸாவுக்கு தெரியப்படுத்தலாம்.

அலெக்ஸ்சாவில் அலாரம்

அலெக்ஸ்சா பயன்படுத்தி வந்த அமேசானின் பெரும்பான்மை வாடிக்கையாளர்களுக்கு அதில் காலையில் துயில் எழுப்பும் அலாரம் வசதி இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்தது. அலாரம் வைத்துக்கொள்ளும் வசதியையும் இப்போது அமேசான் அலெக்ஸ்சாவில் இணைத்துள்ளது. இதன்மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை நீங்கள் அலாரம் ஒலியாக அமைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியை இணைத்ததன் மூலம் பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் அலாரம் என்ற தேவையை அமேசான் நிவர்த்தி செய்து வைத்துள்ளது.

அலாரம் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

அலாரம் வைப்பதற்கான கட்டளையை உங்கள் குரல் மூலமாக மிக எளிமையாக அலெக்ஸ்சாவிற்கு தெரியப்படுத்தலாம். உதாரணத்திற்கு

“Alexa, set an alarm for [time] to [song]”

இதுபோன்றதொரு கட்டளையை நீங்கள் அலெக்ஸ்சாவிற்கு தரும் பட்சத்தில், அது நீங்கள் சொன்ன நேரத்தில், உங்கள் விருப்ப பாடலில் உங்களைத் துயில் எழுப்பும்.

அலுவலக சூழலுக்கும் அலெக்ஸ்சா

அமேசானின் இந்தத் தொழில்நுட்பம் இதுவரை வீட்டு உபயோகத்திற்கும், வீட்டிலிருக்கும் பொருட்களை குரல் மூலம் கட்டுப்படுத்துவதற்குமே பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. மிகச் சமீபத்தில் அமேசான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் அலெக்ஸ்சாவை இனி அலுவலக சூழலிலும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அலுவலகத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, கூட்டு அழைப்புகள் மேற்கொள்வது, முக்கியமான நாட்களைக் குறித்து வைத்துக்கொள்வது போன்ற அலுவல்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் நம்மை தேவையற்றவர்களாக ஆக்காத வரைக்கும் அதை அனுபவிப்போம்.

 

Related Articles

இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்ட... ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன...
முலாம்பழம் ஜூஸ் குடிப்பதன் பலன்கள்!... கோடை காலம் தொடங்கி மண்டபத்திரம் மக்களே என்று நம்மை வாட்டி வதைத்து எடுக்கிறது. இந்த சூழலை சமாளிக்க சாலை ஓரங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறு சிறு கடைக...
சென்சாரில் இருபதுக்கும் மேல் கட் வாங்கிய... பல எதிர்ப்புகளை சந்தித்து 2013ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம் முதல் பாகம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அப்...
வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்களே அப்ப... இந்திய நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு மகா மட்டமாக நம் நாட்டு மாணவர்களின் கல்வி அ...

Be the first to comment on "வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*