வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?

Alexa

தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. இப்போது தொழில்நுட்பம் சக மனிதனின் அருகாமை போன்ற ஒன்றையே உருவாக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் குரலுக்கு கட்டுப்படும் மனிதர் அல்லாத திறமையான ஒரு தனி உதவியாளரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அமேசான் அலெக்ஸ்சா

மின் வணிகத்தில் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனத்தின் அறிமுகம் தான் இந்த அலெக்ஸ்சா. குரலின் மூலம் கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்தத் தனி உதவியாளர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்ந்தெடுத்துக் கேட்பது, செய்யவேண்டியதைப் பட்டியலிட சொல்லிக் கேட்பது, வானொலி கேட்பது, இணையத்தில் தேடுவது, வானிலை அறிக்கைகளைத் தெரிந்து கொள்வது, இணையத்தில் பொருட்கள் வாங்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம், குறிப்பாக இந்தக் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் குரல் மூலம் மட்டும் உங்கள் தனி உதவியாளரான அலெக்ஸாவுக்கு தெரியப்படுத்தலாம்.

அலெக்ஸ்சாவில் அலாரம்

அலெக்ஸ்சா பயன்படுத்தி வந்த அமேசானின் பெரும்பான்மை வாடிக்கையாளர்களுக்கு அதில் காலையில் துயில் எழுப்பும் அலாரம் வசதி இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்தது. அலாரம் வைத்துக்கொள்ளும் வசதியையும் இப்போது அமேசான் அலெக்ஸ்சாவில் இணைத்துள்ளது. இதன்மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை நீங்கள் அலாரம் ஒலியாக அமைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியை இணைத்ததன் மூலம் பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் அலாரம் என்ற தேவையை அமேசான் நிவர்த்தி செய்து வைத்துள்ளது.

அலாரம் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

அலாரம் வைப்பதற்கான கட்டளையை உங்கள் குரல் மூலமாக மிக எளிமையாக அலெக்ஸ்சாவிற்கு தெரியப்படுத்தலாம். உதாரணத்திற்கு

“Alexa, set an alarm for [time] to [song]”

இதுபோன்றதொரு கட்டளையை நீங்கள் அலெக்ஸ்சாவிற்கு தரும் பட்சத்தில், அது நீங்கள் சொன்ன நேரத்தில், உங்கள் விருப்ப பாடலில் உங்களைத் துயில் எழுப்பும்.

அலுவலக சூழலுக்கும் அலெக்ஸ்சா

அமேசானின் இந்தத் தொழில்நுட்பம் இதுவரை வீட்டு உபயோகத்திற்கும், வீட்டிலிருக்கும் பொருட்களை குரல் மூலம் கட்டுப்படுத்துவதற்குமே பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. மிகச் சமீபத்தில் அமேசான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் அலெக்ஸ்சாவை இனி அலுவலக சூழலிலும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அலுவலகத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, கூட்டு அழைப்புகள் மேற்கொள்வது, முக்கியமான நாட்களைக் குறித்து வைத்துக்கொள்வது போன்ற அலுவல்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் நம்மை தேவையற்றவர்களாக ஆக்காத வரைக்கும் அதை அனுபவிப்போம்.

 

Related Articles

இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...
மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தி... உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்?மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்...
திருடனாகுவது எப்படி? இதோ சில டிப்ஸ்! திர... முதலில் கள்ளச் சாவிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதில் எத்தனை வகைகள் உள்ளன எந்த மாதிரியான பூட்டுகளுக்கு எந்த மாதிரியான சாவிகளை போட வேண்டும் எ...
01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட... தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த சில மாதங்களுக்கு ...

Be the first to comment on "வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*