Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!

BSNL Internet Calling through Wings App

இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்தியாவின் எந்த ஒரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் இணைய தொலைபேசி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை விங்ஸ் செயலி மூலம் யார் விங்ஸ் செயலியை வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிலை பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு இருந்து வந்தது.

தற்போது விங்ஸ் செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் பேச முடியும் என்ற கூடுதல் வசதியை நாட்டிலியே முதல் முறையாக ஏற்படுத்தி தந்து இருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

இதனை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா தொடங்கி வைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக முன்பதிவினை இந்த வாரம் தொடங்கி உள்ளது பிஎஸ்என்எல். பதிவு  செய்தவர்களுக்கு வரும் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் இணைய வழி தொலைபேசி சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல்.

Related Articles

உங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்... கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ உலகில் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்சுகள் வெளிவர தொடங்கியுள்ளது. இப்போது அவற்ற...
48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்... கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ...
கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும் தீயணை... சேத் ரான்ஸ், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒன்டே மேட்சுகள் மற்றும் நான்கு டி20 மேட்சுகள் விளையாடி வருபவர். இவர் நடக்க இருந்த பெரிய தீ விபத்த...
ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யப்பட்... இந்தியாவே உற்று நோக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2018ல் பல புதிய வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன திருவிழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாள...

Be the first to comment on "Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!"

Leave a comment

Your email address will not be published.


*