தோழர் வெங்கடேசனை மிஸ் பண்ணாதீங்க! – தோழர் வெங்கடேசன் விமர்சனம்!

Thozhar venkatesan movie review

போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று பஸ்ஸை காணோம் என்று புகார் தருகிறார் நாயகன். பிளாஸ்பேக் விரிகிறது. லட்சுமி சோடா பேக்டரி நடத்தி வரும் முதலாளி நாயகனின் கதை சொல்லப்படுகிறது. அதே சமயம் நாயகனுக்கு எப்படி கை போயிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இட்லிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நாயகியின்  அம்மா இறந்துவிட சொந்தபந்தம் இல்லாத அழகான நாயகி தனிமையாக்கப் படுகிறாள். காமவெறி பிடித்த ஆண்களால் நாயகிக்கு இம்சை ஏற்பட அவளுக்கு ஆதரவு தருகிறான் நாயகன். இருவருக்கும் காதல் மலர்கிறது. 

திடீரென ஒருநாள் நாயகன் மீது கவுர்மென்ட் பஸ் இடிக்க நாயகனின் கைகள் பறிபோகின்றன. இதற்குப் பிறகு நாயகனும் நாயகியும் எப்படி இணைந்து வாழ்ந்தார்கள், அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது, அதை எப்படி இருவரும் எதிர்கொள்கிறார்கள்…  நாயகனுக்கு அரசிடமிருந்து நஷ்ட ஈடு கிடைத்ததா அதற்காக “தோழர் வெங்கடேசன் ” எவ்வளவு தூரம் போராடினார், மீண்டும் அவர் முதலாளி ஆனாரா என்பதே படத்தின் கதை. 

“இங்க யாரு மனச பாக்குறாங்க உடம்ப தான பாக்குறாங்க”, “நான் உன்ன என் அம்மா மாதிரி பாத்துக்குறேன்… “, ” கை எடுக்கலனா செத்திருப்பியா… இதுக்கு நான் செத்தே போயிருக்கலாம்… “, ” லேட்டா கொடுத்தாலும் கடவுள் எனக்கு எப்பவும் பெஸ்டா தான் கொடுக்கிறார் “,  போன்ற வசனங்கள் கவனத்தை பெறுகின்றன. 

தமிழக அரசு போக்குவரத்து துறையின் அலட்சிய நடவடிக்கைகள் மற்றும் ஊழலைப் பற்றி கோர்டில் இரண்டு வக்கீல்களும் பேசிக்கொள்வது அருமையான காட்சி.  பல நாட்டு சட்டங்களை கலந்துகட்டி தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது என்று எதிர் தரப்பு வக்கீல் சொல்லும் காட்சி செம.

அறிமுக நடிகர் அரிசங்கருக்கு இது நல்ல அறிமுகம். நன்றாக நடித்துள்ளார், சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுகளைப் பெற வாய்ப்புள்ளது. நாயகி அழகாக இருக்கிறார், மேக்கப் அவ்வளவாக இல்லாதது கூடுதல் அழகு. ஆனால் நாயகன் அளவுக்கு நாயகி மெனக்கெட்டு நடிக்கவில்லை.    

இசையமைப்பாளர் சகிஷ்னாவின் பின்னணி இசை சுமார். சில இடங்களில் இரைச்சலாக ஒலிக்கிறது.  நம்ம முதலாளி நல்ல முதலாளி என்று அடிக்கடி ரிங்டோன் ஒலிக்கிறது, தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்க விட்ருக்கலாம். பாடல்கள் கேட்கும் ரகமே. 

புதுமையான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை என்று படம் அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் போதிய விளம்பரம் இல்லை. மௌத் டாக் மூலமாகப் பிக்கப் ஆனால் தான் உண்டு.இந்தப் படம் பார்த்த தியேட்டரில் பத்துக்கும் குறைவான நபர்களே இருந்தனர். வழக்கம் போல ஒரு நல்ல படம் தோல்வியை சந்திக்க இருக்கிறது. ஊக்குவிக்கும் கடமை எல்லோருக்கும் உண்டு. தயாரிப்பாளர் சுசூந்திரனுக்கும் இயக்குனர் மகாசிவனுக்கும் பாராட்டுக்கள். 

Related Articles

யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே! ... கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக மாநாட்டில் யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்று தவறுதலாகப் பழமொழியை மாற்றி வாசித்து நெட்டிசன்களுக்கு...
ஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்... மார்ச் 31 ஆம் தேதிக்குள் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றோடு கட்டாயம் ஆதார் காரடையும் இணைக்க வேண்டும் என்ற கால கெடுவை மறு உத்தரவு வரும் வர...
அகில உலக ஆணழகனின் அம்மா அப்பா யார்? இந்த... சர்கார் படம் குறித்து பிரச்சினை எழுந்த காலத்தில் இருந்தே இந்த மூட்டைப் பூச்சியின் தொந்தரவு இணையத்தை உபயோகிப்போருக்கு இருந்து வருகிறது. கொஞ்சம் கோபத்த ...
உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரண... விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். "அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்" என்பது தான் ...

Be the first to comment on "தோழர் வெங்கடேசனை மிஸ் பண்ணாதீங்க! – தோழர் வெங்கடேசன் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*