ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்

Tiruchi railway junction

எண்பதுகளின் இறுதியில் வந்த நிறையத் தமிழ் திரைப்படங்கள் ரயிலை மையமாக வைத்து வெளிவந்தன. அப்போது ரயில் என்பது ஒரு ஆச்சரியம். புதிய நட்புகள் உருவாகும் இடம். ரயிலில் பயணிப்பதே ஒரு அனுபவமாக அப்போது பார்க்கப்பட்டது. இப்போதும் அப்படித்தானா?

நிறைய மாற்றம் வேண்டும்        

நிலைமை இப்போது அப்படியில்லை. ரயில் பயணங்களில் நிறைய அசௌகரியங்கள் வந்து சேர்ந்துவிட்டன. குறிப்பாகப் பெண்களுக்கு. முறையாகப் பராமரிக்கப்படும் கழிவறை இல்லாமை, பாதுகாப்பு இல்லாதது. இரவில் தங்கள் நிறுத்தத்தைத் தெரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்.

அடிக்கடி நாளிதழ்களில் வெளியிடப்படும் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை செய்திகளில் பெரும்பாலானவை ரயிலிலேயே நிகழ்த்தப்படுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து ரயில் பயணங்களை ஒரு அனுபவமாக அல்லாமல், வேறு வழியே இல்லாமல் மேற்கொள்ளப்படும் அசௌகரியமாகவே மாற்றியிருக்கின்றன.

ரயில்வே அமைச்சகத்தின் முயற்சிகள்

பயணிகளின் இந்த அசௌகரியத்தைக் களைய ரயில்வே அமைச்சகமும் நிறையத் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ரயில்வே நிலையங்களுக்குத் தர மதிப்பீடு தரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு பச்சை மதிப்பீட்டிற்காக தெற்கு ரயில்வேயால் முன்மொழியப்பட்டு இருக்கிறது. பச்சை மதிப்பீடு என்பது தெற்கு ரயில்வேயால் தரப்படும் உயர் A வகை மதிப்பீடாகும்.

எப்படி யாரால் இந்த மதிப்பீடு தரப்படுகிறது?

ரயில்வே வாரியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மேலாண்மை இயக்குநரகம் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க இந்திய தொழில் கூட்டமைப்பு இந்த மதிப்பீட்டை வழங்குகிறது. திருச்சியைப் போலவே மேலும் சில நகர ரயில்வே நிலையங்களும் தர மதிப்பீட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தென் மேற்கு ரயில்வேயின் செகந்திராபாத் , வட மேற்கு ரயில்வேயின் ஜெய்ப்பூர் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையம் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் என்று மூன்று விதமாகத் தர மதிப்பீடு செய்யப்படும். வெள்ளி மதிப்பீடு பெற ஒரு ரயில் நிலையம் 60 முதல் 69 புள்ளிகள் வரை பெற வேண்டும்.தங்கத்திற்கு 70 முதல் 79 புள்ளிகள் வரை. அதேபோல பிளாட்டினத்திற்கு 80 முதல் 100 வரை.

அதிக புள்ளிகள் பெற ரயில்வே அதிகாரிகள் நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து ஆலோசனைகள் வழங்க நிறுவனங்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.முன்மொழியப்படும் அந்நிறுவனம் ஐந்து முக்கியமான பகுதிகளில் தங்கள் கவனத்தை செலுத்தும். அவை முறையே பயணிகளின் வசதிகள், சுத்தம், சுகாதாரமான கழிவறைகள், போதுமான தண்ணீர் வசதி, ஆற்றல் திறன் மற்றும் சுகாதார சீர்கேடு அற்ற பொருட்களை பயன்படுத்துவது என்ற அடிப்படையில் அமையும்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு பச்சை மதிப்பீட்டைப் பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதன் அதிகாரிகள் தங்கள் ரயில் நிலையத்தின் பலம், பலவீனங்கள் குறித்தும், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் நிறுவனங்களை ஈடுபடுத்த முன்மொழிந்திருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி ஜனவரியில் நடக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. ‘அந்த டாய்லெட்டுல எப்போ சார் பக்கெட்டு வெப்பீங்க?’

Related Articles

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்... விநாயகர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது அவரின் பானை வயிறும், அவர் கையில் இருக்கும் மோதகம். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த...
அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இ... ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும...
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகள் ... 1. கடவுளுக்கு கடிதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் கதை இது. ஸ்ரீரங்கத்தில் டீக்கடை வைத்திருப்பவன் ரங்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வருபவன் கோவிந்து. அவனுக்...
ஐடி துறை பெண்கள் கலாச்சார சீரழிவுக்கு மு... ஐடி துறையில் பணியாற்றும் பெண்களின் குறைகள் என்னென்ன என்று பார்த்தால் அதை இந்த பொது சமூகம்  எண்ணிக்கையே இல்லாமல் தன் இஷ்டத்திற்கு அடுக்கிக் கொண்டே போகி...

Be the first to comment on "ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்"

Leave a comment

Your email address will not be published.


*