பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!

TN People didnot care about the Plastic barrier!

இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. அதன் படி வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிலுள்ள துணி பையையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது.

அறிவுறுத்தி என்ன பயன் ?

தமிழகத்தை பொறுத்தவரை எதற்கு தடை விதித்தாலும் அது வீண் தான். எதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து தடைவிதிக்கப்பட்ட செயல்களை மீண்டும் சட்டவிரோதமாக செய்வது தமிழர்களுக்குப் பழக்கப் பட்ட ஒன்று.

தற்போது பிளாஸ்டிக் தடை விவகாரத்திலும் அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. தடை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருந்த பொதுமக்கள் அடுத்த சில நாட்களிலயே  பழையபடி மாறிவிட்டனர். அரசும் கெடுபிடி போட்டு பார்த்தது. ஆனால் நம் மக்களிடையே எதுவும் பலிக்கவில்லை.

சட்டத்தை, அரசு விதித்த தடையை (நியாயமான தடை) மதிப்பது நம் கடமை. அவற்றை பின்பற்றாமலிருப்பது நமக்கான மரியாதையை நாமளே குறைத்துக் கொள்வதற்குச் சமமானது என்பதை எப்போது தான் தமிழக மக்கள் உணர்வார்களோ என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி ப... தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதே...
இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அ... இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக ...
தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!... ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். நமக்கு மாறுபட்ட கருத்துடையயோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில்...
செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்த... கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செ...

Be the first to comment on "பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*