குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்தியில் கர்நாடகம் இருப்பதாக அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்.

மைசூர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் ‘கர்நாடகாவின் நம்பிக்கையாக எடியூரப்பா திகழ்கிறார். நாட்டின் அடுத்த முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என்றார்.

‘கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நம் இந்திய நாடு ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்சார வசதியை பெற்று இருக்கின்றன. இந்தச் சரித்திர சாதனையை நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

 

ராகுல் காந்திக்கு சவால்

பிரதமரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற அறிவிப்பை ‘மற்றுமொரு பொய்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுலின் இந்த விமர்சனத்துக்குப் பதில் கூறும் வகையில் தனது தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் ‘2005 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங், 2009 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார். ஆனால் நடந்தது என்ன? கேள்வி கேட்பதற்கு முன்பு ராகுல் காந்தி இந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

மேலும் பேசிய அவர் ‘ராகுல் காந்தி தொடர்ந்து 15 நிமிடங்களுக்குப் பேசினால், என்னால் அவர் முன்னாள் நிற்க கூட முடியாது என்று தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லியிருப்பது சரிதான். அவர் பேசுபவர் மட்டும் தான், ஆனால் நாங்கள் வேலை செய்பவர்கள். அதனால் நாங்கள் உங்கள் முன்பு அமர்வதற்குக் கூடத் தகுதி பெற்றவர்கள் தான்’ என்றார்.

மேலும் ‘காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் பற்றி நீங்கள் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் தாய் மொழியிலோ எந்தக் காகித குறிப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்குப் பேச முடியுமா?’ என்று ராகுல் காந்திக்கு பிரதமர் எதிர் சவால் விடுத்துள்ளார்.

மே 8 ஆம் தேதி வரை பிரதமர் 12 தேர்தல் பேரணிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மே 12 ஆம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு R... தெலுங்குக்கு எப்படி பாகுபலியோ கன்னட திரை உலகுக்கு கேஜிஎஃப் அப்படி! என்று ஏகப்பட்ட பில்டப் இந்தப் படத்துக்கு. பில்டப்புக்கு தகுந்தாற் போல படம் இருக்கிற...
பேஸ்புக்கை எப்படி நல்ல முறையில் பயன்படுத... பேஸ்புக் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீம்ஸ் தான். அதை தொடர்ந்து நட்புக்களை பெருக்கிக் கொள்ளுதல் என்ற விஷயம். இருந்தாலும் நமக்கு உண்மையில்...
2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உற... டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவு...
புற்றுநோயை உண்டாக்கும் பால் பாட்டில்கள்!... குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்த படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்க கூடிய அபாயம் உடைய பிஸ்பினா ஏ என்ற மூலப...

Be the first to comment on "குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்"

Leave a comment

Your email address will not be published.


*