ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலைக் கண்டுபிடிக்க உதவிய ரேடார்கள்

How radars unearthed 39 Indians killed in Iraq by ISIS

2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு
பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்குக்கும் சில
தகவல்கள் கிடைக்கின்றன. அதன்படி பதூஷ் நகரில் இரண்டு திட்டு போன்ற அமைப்புகள் காண
படுவதாகவும், அதில் ஏதோ புதையுண்ட நிலையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

திட்டைத் தோண்டும் முயற்சி

ஈராக்கிய படைகள் உள்ளடக்கிய இந்திய அணிக்குத் தலைமை ஏற்ற அமைச்சர் சிங் அந்தத்
திட்டை தோண்ட முடிவு செய்தார். 2014 ஆம் ஆண்டு இராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகள்
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவர்கள் சிறைப்படுத்தி
வைத்திருந்தவர்களின் எச்சங்கள் கிடைக்கின்றனவா என்ற நோக்கில் திட்டு தோண்டப்பட்டது.

‘ஆரம்பத்தில் திட்டு தோண்டப்பட்ட போது ஆண்கள் கையில் அணியும் வளையமும் நீண்ட தலை
முடியும் கிடைத்தன. அதை முதன் முதலில் பார்த்த போது பஞ்சாபை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ஊகித்தோம்’என்று அமைச்சர் சிங் தெரிவித்தார்.

மனித உடல்கள் தென்படுகின்றனவா என்பதை அறியத் தொடர்ந்து தோண்டும் படலம்
நடைபெற்றது. முதலில் கண்டெடுத்த இந்தியர் பஞ்சாபை சேர்ந்த சந்தீப் குமார் ஆவார்.
கைப்பற்றப்பட்ட எஞ்சியவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் அடையாளம்
காணப்பட்டது. பாக்தாத் நகரில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் என்னும் இடத்தில் இந்தப்
பரிசோதனைகள் நடைபெற்றன. முன்னரே இந்திய அதிகாரிகள் தேடப்படும் இந்தியர்களின்
மாதிரிகளை அனுப்பி வைத்திருந்தனர். பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகே இறந்த
இந்தியர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 2014 ஆம் ஆண்டு, பஞ்சாபில் இருந்து கட்டுமான வேலைக்காக ஈராக்கிற்கு வந்த நாற்பது
தொழிலாளிகள் உடனான தொடர்பை ஈராக்கில் இருக்கும் இந்திய அதிகாரிகள் இழந்தனர்.
அவர்கள் அரசாங்க கட்டுமான திட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அவர்கள்
அனைவரையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் கடத்தி சென்றனர். அவர்களோடு சில
வங்கதேச தொழிலாளர்களையும் கடத்திச் சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட வங்கதேச
தொழிலாளர்கள் அனைவரையும் விடுவித்தது அந்த அமைப்பு. ஹர்ஜீத் மாசி என்ற இந்தியர்
ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு தகவல்
தெரிவித்தார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும், ஈராக்கிய படைகளுக்கும் இடையே நடந்த சண்டையின்
போது, பதூஷ் சிறைச்சாலை முழுவதும் அழிக்கப்பட்டது. பாக்தாத் அரசு சிறையில் யாரும்
இல்லை என்று அறிவித்தது. கடந்த ஆண்டு வரை அங்கிருந்த இந்தியர்களைப் பற்றி எந்தத்
தகவலும் ஈராக்கிய அரசிடம் இல்லை.அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது
கூட தெரியாமல் தான் இருந்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்கள்

பாதுஷ் நகரைப் பிடித்த உடன் இந்தியர்கள் அனைவருமே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத
அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலை தப்பித்து வந்த சுர்ஜித்
மாசி தெரிவித்தார். அப்போது அவர் கூற்றை இந்திய அரசாங்கம் ஏற்கவில்லை, ஏனெனில்
அப்போது இந்தியர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் இந்திய அரசாங்கத்துக்கு
வந்து கொண்டிருந்தது.

பல இன்னல்களுக்குச் சகித்து கொண்டு, இறந்த இந்தியர்களை தங்களது தொடர் தேடுதலின்
மூலம் கண்டுபிடித்த அமைச்சர் சிங் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுக்கள்.

Related Articles

அடுத்த பிரதமர் சீமான்! அடுத்த சிஎம் சிம்... சிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே... வாங்கண்ணே... என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து... இயக்கம் ஆரம்பிக்க வைத்து... அத...
” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க ம... இன்று காலா படத்தின் இசை வெளியீடு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து உள்ளது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றி பார்ப்போம்...
நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய வார்த்தை?... "நம்பிக்கை" அது ஏனோ வாழ்வின் இறுதிநிலைக்கு சென்று திரும்பிய பிறகு தான் இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் புரிகிறது. நம் மீது மற்றவர்கள் எவ்வளவு நம்ப...
பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்ற... " பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் " பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் சில அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?ஒரு சின்...

Be the first to comment on "ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலைக் கண்டுபிடிக்க உதவிய ரேடார்கள்"

Leave a comment

Your email address will not be published.


*