டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இரு நகரங்களையும் இணைக்கும் திட்டம் 11000 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் 14 வழிப்பாதை என்ற பெருமையை இந்த வழித்தடம் பெற்றிருக்கிறது. 30 மாதங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் 18 மாதங்களிலேயே முடிக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வரைக்கும் இந்தச் சாலையில் செல்லலாம், இதனால் நாற்பத்து ஐந்து நிமிடங்களில் செல்லக்கூடிய தூரத்தை எட்டு நிமிடங்களில் செல்லலாம்.

841 கோடி செலவில் முதல் அலகான டெல்லி – மீரட் அதிவேகப்பாதை போட்டு முடிக்கப்பட்டு இருக்கிறது. மீரட் வரையிலும் ஆறு வழிப்பாதையாக்கவும், அதன்பிறகு எட்டு வழிப்பாதையாக்கவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சைக்கிளில் செல்பவர்களுக்காக 2.5 மீட்டர்களுக்கு தனியொரு தடமும், நடந்து செல்பவர்களுக்காக 1.5 மீட்டர்களுக்கு தனியொரு தடமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வழித்தடம் முழுவதும் சூரிய மின் விளக்குகளும், மழை நீர் சேகரிப்பு வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

 

பல்வேறு வசதிகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலை

இந்தத் திட்டம் முழுவதுமாக நிறைவேறும் பட்சத்தில் தற்போது டெல்லி – மீரட் இடையேயான பயண தூரமான 4 – 5 மணி நேரம் என்பது குறைந்து 45 நிமிடங்களில் போய் சேரலாம் என்ற நிலை வரும். மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து இந்த வழித்தடம் கண்காணிக்கப்படும்.

இந்தத் திட்டத்தினால் டெல்லியின் மாசு அளவு 27 சதவீதம் வரைக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூரிய மின் சக்தி விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதிகொண்ட ஒரே தேசிய நெடுஞ்சாலை என்ற பெருமையை இந்த வழித்தடம் பெறும்.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் 50000  வாகனங்களை நாளொன்றுக்கு டெல்லியில் இருந்து  அனுப்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அப்படிச் செய்யும் அச்சத்தில் பெருமளவில் மாசு குறையும்.

Related Articles

கோமாவில் இருந்த பெண்ணை இயல்புநிலைக்கு மா... நடிகர் வடிவேலு எத்தனை படங்கள் நடித்தவர் எவ்வளவு மனித உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.பெரும்பாலான...
டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...
சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சன... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை தொடர்ந்து ஜீவா மற்றும் ஹன்சிகாவை வைத்து போக்கிரி ராஜ...
தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம... சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்...

Be the first to comment on "டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது"

Leave a comment

Your email address will not be published.


*