கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்து மோடி எழுதிய கவிதை ஒரு பார்வை!

Modi's poem about the sea

சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள் அனைத்தும் இணைய தளங்களில் வைரல் ஆகின. அதை அடுத்து தற்போது பிரதமர் மோடி எழுதிய கடல் குறித்த கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. மோடி இந்தக் கவிதையை இந்தியில் எழுத தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மோடியின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப் பட்டுள்ளது. அந்தக் கவிதையை இங்கே இணைத்துள்ளோம். 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

அளப்பரிய, முடிவுற்ற, 

ஒப்பில்லாத வர்ணனைகளைக்

கடந்த நீலக்கடலே

உலகிற்கு உயிரளிக்கும் நீ

பொறுமையின் இலக்கணம்

ஆழத்தின் உறைவிடம்

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

வெளித் தோற்றத்திற்கு 

கோபமாய் வீரத்துடன் 

பேரிரைச்சலோடு எழும் அலைகள்

உன் வலியா ? வேதனையா ?

துயரமா ? எதன் வெளிப்பாடு ? 

இருந்தபோதிலும் உன்னை 

கலக்கமின்றி தடுமாற்றமின்றி

உறுதியுடன் நிற்கச் செய்கிறது 

உன் ஆழம். 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

உன்னிடம் உள்ளது

எல்லையில்லாத வலிமை, 

முடிவில்லாத சக்தி ஆனாலும்

பணிதவின் பெருமையை 

நிமிடந்தோறும் நவில்கிறாய் – நீ

கரையைக் கடக்காமல் 

கண்ணியத்தை இழக்காமல், 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

கல்வித் தந்தையாய் 

ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை 

போதிக்கிறாய் நீ

புகழுக்கு ஏங்காத, 

புகலிடத்தை நாடாத

பலனை எதிர்நோக்காத

உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம். 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

நிற்காமல், சளைக்காமல்

வீசும் உன் பேரலைகள் 

முன்னேறுவதே வாழ்க்கை என்ற 

உபதேச மந்திரத்தை உணர்த்தும்

முடிவில்லாத பயணமே 

முழுமையான உன் போதனை. 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

விழும் அலைகளிலிருந்து

மீண்டும் எழும் அலைகள்

மறைந்து 

மீண்டும் துவங்கும் உதயம்

பிறப்பு – இறப்பு என்பது தொடர் வட்டம்

உனக்குள் மடிந்து பின்

உயிர்த்தெழும் அலைகள்

மறுபிறப்பின்

உணர்வூட்டம்

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

பழம்பெரும் உறவான

சூரியனால் புடமிட்ட 

தன்னையழித்து, 

விண்ணைத் தொட்டு

கதிரவனை முத்தமிட்டு

மழையாய் பொழிந்து

 

நீர்நிலைகளாய், சோலைகளாய் 

மகிழ்ச்சி மணல் பரப்பி

படைப்பை அலங்கரித்து – எல்லோருக்கும் 

வாழ்வளிக்கும் நீர் நீ. 

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

வாழ்வின் பேரழகு நீ – 

விஷத்தை அடக்கிய 

நீலகண்டன் போல் – நீயும்

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு

புது வாழ்வைப் 

பிறர்க்களித்து

சொல்கிறாய் 

சிறந்த வாழ்வின் 

மறைபொருளை

 

அலைகடலே! 

அடியேனின் வணக்கம்

இவ்வாறு முடிவுறுகிறது பிரதமர் ( கவிஞர் ) மோடியின் கவிதை! 

Related Articles

“இன்றைய காந்திகள்” – ப... குக்கூ காட்டுப்பள்ளி நடத்தி வரும் சிவராஜ் என்பவர் நடத்தி வரும் தன்னறம் நூல்வெளி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகம் தான் பாலசுப்பிரமணியம் முத்து...
2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் ... கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இன்று மீம் என்பது கலை வடிவமாகப் பார்க்கப் படுகிறது. பல சமூக மாற்றங்களும் சி...
எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை... "பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்... " இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனி...
குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்கள... கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்த...

Be the first to comment on "கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்து மோடி எழுதிய கவிதை ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*