வழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நவீன நீதி கடிகாரம்

all high courts to get justice clocks .

தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின்
எண்ணிக்கை கோடி கணக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கத் தினம் ஒரு நீதிமன்றம் திறந்தாலும் போதாது. சாமானியன் ஒருவனுக்கு நீதிமன்றத்தில் என்ன தான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே பல ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்குச் சிக்கல் உள்ள
ஒரு அமைப்பாக இருக்கின்றன இந்திய நீதிமன்றங்கள். கடந்த பல ஆண்டுகளாகவே நீதிமன்றங்களில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்பது சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்களின் கருத்து ஆகும்.

நவீன நீதி கடிகாரம்

மத்திய அரசின் வழி காட்டுதலின் படி இனி அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் 24 மணி நேரமும்
இயங்கும் வகையிலான எல்ஈடி(LED) செய்தி பலகைகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் படி ஒரு நாளைக்குத் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள
வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயர் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்திறன்
போன்றவற்றை அந்தச் செய்தி பலகையில் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம்
வெளியிடப்படும்.

பிரதமரின் யோசனை

பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையின் படி இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட இருக்கிறது.
உயர்நீதி மன்றங்களைத் தொடர்ந்து கீழ் நீதிமன்றங்களுக்கும் இந்தத் திட்டம் படிப்படியாகச்
செயல்படுத்தப்பட இருக்கிறது. இளைய சட்ட அமைச்சர் பி.பி. சவுத்ரி இது குறித்து பேசும் போது
‘இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட்டால் நீதிமன்றங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி
நிகழ வாய்ப்பு இருக்கிறது. யார் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை
பொது மக்கள் அறிந்து கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்..

பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்

மிக மோசமான செயல்திறனை வெளிப்படுத்தும் வழக்குகளின் பட்டியலில் அலகாபாத் முதல்
இடத்தில் இருக்கிறது. அதில் மட்டும் கிட்டத்தட்ட 267713 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதைத் தொடர்ந்து பம்பாய் 145425 நிலுவை வழக்குகளுடனும் உள்ளது. இந்தப் பட்டியலில்
பம்பாயைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியான, கல்கத்தா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,
தெலங்கானா மற்றும் ஆந்திரா, மெட்ராஸ் , ஒரிசா மற்றும் பாட்னா இடம் பிடித்து உள்ளன.
இந்த நீதி கடிகாரம் சோதனை அடிப்படையில் முதன் முதலில் நீதித்துறையின் டெல்லி
அலுவலகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்டது.

Related Articles

நம் அனைவருக்கும் பிடித்த பாடலாசிரியர் நா... "ஆனந்த யாழை... மீட்டுகிறாயடி... நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்... " என்ற தங்கமீன்கள் படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலையும், " தெய்வங்கள் எல்லாம்...
நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் மு... மின் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகம் முழுவதும் மின் சக்திக்கு உண்டான மாற்று என்ன என்பதை அடிப்படையாக வைத்து ப...
தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கு... ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந...
அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும... ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முத...

Be the first to comment on "வழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நவீன நீதி கடிகாரம்"

Leave a comment

Your email address will not be published.


*