தீபாவளிப் பண்டிகை அன்று எண்ணெய் ஸ்நானம் செய்வது எதற்காக?

பல பண்டிகைகள் நாம் கொண்டாடினாலும் தீபாவளிப் பண்டிகைக்கு தனி சிறப்பு உண்டு.  தீபாவளித் திருநாள் அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றி கொண்டாடுகிறோம். புராணத்திலேயே இதற்குச் சான்று உள்ளது.

தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மனிதன் துன்பத்திலிருந்து விடுபட கடுமையான விரதங்கள் இருக்கிறான். இத்தகைய உடலை வருத்தி செய்யும் தவங்களினால் மட்டுமே மனிதனால் துன்பத்திலிருந்து விடுபட முடியுமா? மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சுலபமான வழி கிடையாதா? இதுவே தீர்க்கதமஸ் முனிவருக்கு ஏற்பட்ட சந்தேகம்.

சனாதன முனிவரிடம் சென்று தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினார். சனாதன முனிவர் சிவ பெருமானின் சீடர். பிரம்மாவின் மானசீக புதல்வர். அனைத்தும் அறிந்தவர்.

இதற்கு பதிலளித்த சனாதனர், “கடுமையான விரதங்கள் மட்டுமின்றி இறைவனின் பேரருளை பெறுவதற்கு எளிமையான வழிகளையும் நமது வேதங்கள் தந்திருக்கின்றன. துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் நரக சதுர்த்தசி அன்று தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம்” என போதித்தார்.
“தீர்க்கதமஸ்” முனிவருக்கு “எதற்காக தீபாவளிப் பாண்டிகையை எண்ணை ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து,  விளக்கேற்றி கொண்டாட வேண்டும்” என்ற  சந்தேகம் வந்தது.. அதற்கு சனாதனர்  எடுத்துரைத்த தீபாவளிப் பண்டிகையின் உட்கருத்து இதோ:

“ எள் புனிதமான ஒன்று. அதிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையில் மகாலட்சுமி இருக்கிறாள். நாம் எண்ணை ஸ்நானம் செய்ய உபயோகப்படுத்தும் அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை மிக்க சந்தனத்தில் பூமா தேவியும், மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவியும் நிறைந்திருக்கிறார்கள்.

மேலும், தீபாவளி அன்று நீர் நிலைகளில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பதார்த்தங்களில் அமிர்தமும், மலர்களில் யோகினியும் வசிக்கிறார்கள். தீபச்சுடரில் பரமாத்மாவும், பட்டாசு தீப்பொறிகளில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள்.

மேலும், தீபாவளி அன்று நாம் நீராடும் நீரிலும் கங்கா தேவி வாசம் செய்கிறாள். “ஜலே கங்கே தைலே லக்ஷ்மி” என்று குறிப்பிடுவர். அதனால் தான் தீபாவளி அன்று “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

எண்ணை தீய்த்திக் குளிப்பதால் உடல் மாசு நீங்குகிறது. இறைவனை வழிபடுவதால் உள்ளத்து மாசு களையப் படுகிறது. இதுவே தீபாவளி அன்று எண்ணை ஸ்நானம் செய்வதன் உட்கருத்து.

எனவே தான், தீபாவளி அன்று அனைத்து கடவுள்களையும் வணங்கும் விதமாக,  எண்ணை தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, மலர்களாய் இறைவனை அலங்கரித்து, இனிப்பு பட்சணங்கள் நிவேதனம் செய்து, பட்டாசுகள்  வெடித்து கொண்டாட வேண்டும்.

Related Articles

பெர்னாட்ஷா பொன்மொழிகள் ஒரு பார்வை!... தேவையான சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். சந்தர்ப்பம் தானாக வரக்கூடியது அல்ல. மனிதன் தான் அதனை தானாக உண்டுபண...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
ஜல்லிக்கட்டு! தமிழரின் அடையாளம் – ... கடந்த வருடம் இதே மாதத்தில் ஜல்லிக்கட்டு என்பது எங்களின் வாழ்வுரிமை என்று அதனை மீட்டெடுக்க ஒன்றுதிரண்டு போராடி வெற்றிகண்டார்கள் தமிழர்கள். வேலை இல்லாமல...
விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்ற... ஒரு லாரி விபத்துக்கு உள்ளானா போதுமே! உடனே அதுல இருக்குற பொருள திருட கூட்டம் கூட்டமா வந்துடுவிங்களே! - இந்த வரிகளை ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் வாசித்துப் ...

Be the first to comment on "தீபாவளிப் பண்டிகை அன்று எண்ணெய் ஸ்நானம் செய்வது எதற்காக?"

Leave a comment

Your email address will not be published.


*