ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!

ஒரு துக்கவீட்டிற்கு எப்படி வரவேண்டும் என்பதை விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகவலை தளங்களில் கருத்துக்கள் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

கடந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியால் உயிர் இழந்த அனிதாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென அரியலூர் விரைந்து ஆறுதல் சொல்லி வந்தார் நடிகர் விஜய். அதே போல தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறி இருக்கிறார். கூடவே உதவித்தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

 

பின்பற்ற வேண்டிய பண்பு

பெரியோரை மதித்தல், எளிமையைக் கடைபிடித்தல், தேவையான நேரத்தில் உரிமைக்காக குரல் கொடுத்தல் போன்ற பண்புகள் விஜய்க்கே உரித்தானது தான். பகலில் வந்தால் ரசிகர்கள் அன்புத் தொல்லை தருவார்கள் என்பதால் நள்ளிரவில் வந்து செல்லுதல் என்பதெல்லாம் உச்சக்கட்ட மனிதம். இப்படி பலவிதமாக விஜயை பாராட்டியும் புகழ்ந்தும் பேசி வருகிறார்கள். குறிப்பு அப்படி பேசுபவர்களில் பாதி பேர் அஜித் ரசிகர்கள்.

Related Articles

பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்க... பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியே போனால் விரைவில் நூறு ரூபாயை எட்டி விடும் என்று வாகன ஓட்டிகள் வருத்தத்தையும் அதிருப்...
தனுஷை விட சாய் பல்லவி தான் அதிக கவனம் ஈர... இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாரி 2. கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.ய...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ... சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன், வசூல் சக்ரவர்த்தி என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள ரஜினிகாந்த் 12 - 12 - 1950 அன்று பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ப...
01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட... தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த சில மாதங்களுக்கு ...

Be the first to comment on "ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!"

Leave a comment

Your email address will not be published.


*