ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!

ஒரு துக்கவீட்டிற்கு எப்படி வரவேண்டும் என்பதை விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகவலை தளங்களில் கருத்துக்கள் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

கடந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியால் உயிர் இழந்த அனிதாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென அரியலூர் விரைந்து ஆறுதல் சொல்லி வந்தார் நடிகர் விஜய். அதே போல தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறி இருக்கிறார். கூடவே உதவித்தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

 

பின்பற்ற வேண்டிய பண்பு

பெரியோரை மதித்தல், எளிமையைக் கடைபிடித்தல், தேவையான நேரத்தில் உரிமைக்காக குரல் கொடுத்தல் போன்ற பண்புகள் விஜய்க்கே உரித்தானது தான். பகலில் வந்தால் ரசிகர்கள் அன்புத் தொல்லை தருவார்கள் என்பதால் நள்ளிரவில் வந்து செல்லுதல் என்பதெல்லாம் உச்சக்கட்ட மனிதம். இப்படி பலவிதமாக விஜயை பாராட்டியும் புகழ்ந்தும் பேசி வருகிறார்கள். குறிப்பு அப்படி பேசுபவர்களில் பாதி பேர் அஜித் ரசிகர்கள்.

Related Articles

சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!... யாருக்கு இந்த படம்? ஓடி ஓடி உழைத்துவிட்டு அதற்குத்தகுந்த பலனை பெறாமல் காலங்காலமாக அறியாமையால் ஏமாந்துகொண்டு வறுமையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிரு...
ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் ஒரு பா... நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் :வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து, புதுச்சேரி தனி தொகுதி ஆகிய காரணங்களால் இரண்டு தொகுதிகளை விடுத்து மீதி 3...
மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம... ஸ்பைடர் படத்தின் தாக்கத்திலிருந்து... அறிமுகமில்லாத மனிதனுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்வது தான் மனிதாபிமானம் என்ற கருத்தை சமீபத்தில் வெளியாகிய ...

Be the first to comment on "ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!"

Leave a comment

Your email address will not be published.


*