குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும் இனி கட்டணம்

parking

தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில். குடிமை முகவர்களும், குடியுரிமை நலச் சங்கமும் பரஸ்பரம் பேசி எவ்வளவு கட்டணம் என்பதைத் தீர்மானித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் காலி மனைகளையும் இனி பார்க்கிங் செய்து கொள்ளும் இடமாகப் பயன்படுத்தலாம் என்று அதன் உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. Delhi Maintenance and Management of Parking Rules, 2017ல் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டு, அது டெல்லி ஆளுநர் அனில் பைசால் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

திட்ட வரைவின் விதிமுறைகள் போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த வரைவின் முக்கிய நோக்கமே நெரிசல் இல்லாத சாலையை உருவாக்குவதும், பொது போக்குவரத்து மற்றும் மின் வாகனங்களை மக்கள் அதிக அளவுக்குப் பயன்படுத்து ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடிப்படை பார்க்கிங் கட்டணத்தைத்  கண்காணிப்பு குழுவின் தலைவராகவும், தலைமை செயலாளராகவும் பதவி வகிக்கும் அன்ஷு பிரகாஷ் முடிவு எடுப்பார். தலைமை கண்காணிப்பு குழுவுக்கு வழிகாட்டியாகப் போக்குவரத்து ஆணையாளர் இருப்பார்.

தெருவில் வண்டியை நிறுத்துவதற்கும், குடியிருப்பு பகுதியின் திறந்தவெளியில் வண்டியை நிறுத்துவதற்கும் கட்டண வேறுபாடுகள் இருக்கும் என்று விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. முதல் ஒரு மணிநேரத்திற்குத் தெருவில் வண்டியை நிறுத்தச் செலுத்தப்படும் கட்டணம், குடியிருப்பு பகுதியில் வண்டியை நிறுத்தச் செலுத்தப்படும் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீக் ஹவர், மற்ற நேரங்கள் என்று பலவாறாக பிரித்து நேரத்திற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. சந்தையில் கடை வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் நாள் முழுவதும் தங்கள் வாகனங்களை மட்டும் நிறுத்தி வைத்திருப்பதைத் தடுக்கும் விதமாக, பீக் ஹவரில் சந்தையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் டெல்லி அரசு விதிமுறைகளை மாற்றி அமைத்திருக்கிறது. கட்டணத்தை மாதாந்திர பாஸ் மற்றும் டோக்கன் மூலம் செலுத்தும் வசதியும் டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

வீடுகளில் பார்க்கிங் செய்ய இடம் இருந்தும், தெருக்களில் தங்கள் வண்டிகளை பார்க்கிங் செய்திருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லி அரசு ஒட்டுமொத்த நாட்டிற்குமே பல திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

 

Related Articles

மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க குளோ... இருபது ஆண்டுகளுக்கு முன்பு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டோலி என்ற ஆட்டுக்குட்டியைப் போலவே, அதே தொழில்நுட்பத்தை பின்பற்றி தற்போது சோங் மற்றும் ஹுவா...
ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் ... 1.நடிகர் சதீஷ் :மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வரு...
நாம் உண்ணும் உணவின் வரலாறு – பகுதி... மிளகு பொங்கல், பெப்பர் சிக்கன், ரசம் , முட்டை வறுவல். இதில் எல்லாம் சேர்க்கப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருளை பற்றித்தான் தொடரின் இந்தப் பகுதியில் பார்...
செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும்... சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்...

Be the first to comment on "குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும் இனி கட்டணம்"

Leave a comment

Your email address will not be published.


*